திருமணத்திற்கு வற்புறுத்தியதால் கள்ளகாதலியை கொன்று கிணற்றில் வீசிய கள்ளகாதலன்!!

காதலியை கொன்று கிணற்றில் வீசிய கொடூர கள்ள காதலனை போலீசார் கைது செய்தனர்.

திருமணத்திற்கு வற்புறுத்தியதால் கள்ளகாதலியை கொன்று கிணற்றில் வீசிய கள்ளகாதலன்!!

நாமக்கல் மாவட்டம்  கொசவம்பட்டி கிராமத்துக்கு ஒதுக்குப்புறமாக இருந்த கிணற்றில் கடந்த மாதம் 23-ஆம் தேதியன்று ஒரு பெண்ணின் சடலம் மீட்கப்பட்டது. இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உடனடியாக உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவர விசாரணை மேற்கொண்டனர். அப்போது தான் இறந்துபோன பெண் அதே கிராமத்தைச் சேர்ந்த லலிதா என்பது தெரியவந்தது. மேலும், லலிதாவின் கணவர் 20 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்ததும், அதை தொடர்ந்து அவர் தனியாகவே வசித்து வந்ததும், பின்னர் அதே பகுதியைச் சேர்ந்த சுரேந்தர் என்பவருடன் லலிதாவுக்கு பழக்கம் ஏற்பட்டு, இருவரும் யாருக்கும் தெரியாமல் நெருக்கம் காட்டி வந்ததும் தெரியவந்தது.

இதனைத்தொடர்ந்து சந்தேகத்தின் அடிப்படையில் லலிதாவின் காதலன் சுரேந்தரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது, காதலித்து வந்த 40 வயது பெண்ணை கொலை செய்த அவருடைய ஆண் நண்பர், கொலை தொடர்பாக அளித்துள்ள வாக்குமூலம் காவல்துறையை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

விசாரணையில், லலிதா என்னை திருமணத்துக்கு வற்புறுத்தி வந்ததாகவும் அதனால் அவரை கொல்ல செய்ய திட்டமிட்டதாகவும் கூறியுள்ளார். அதன்படி கடந்த மாதம் 15 ஆம் தேதி இருவரும் சந்தித்தபோது திருமணம் தொடர்பாக இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதால், ஆத்திரமடைந்த இளைஞர் சுரேந்தர், கள்ளக்காதலி லலிதாவை கொலை செய்து, கிணற்றில் வீசியதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து சுரேந்தர் அளித்த வாக்குமூலத்தின் பேரில் அவரை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.