வீட்டின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்த பெண்... மணமகனின் தந்தையை வெட்டி கொன்ற பெண்ணின் தந்தை!

காதல் திருமணம் செய்து கொண்டதால் கணவரின் தந்தையை மணப்பெண்ணின் தந்தை வெட்டிக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வீட்டின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்த பெண்... மணமகனின் தந்தையை வெட்டி கொன்ற பெண்ணின் தந்தை!

மதுரை திடீர் நகர் பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மகன் சிவ பிரசாத், அதே பகுதியை சேர்ந்த சடையாண்டியின் மகள் சினேகாவை கடந்த 2 வருடமாக காதலித்து இரு வீட்டார் எதிர்ப்பை மீறி நேற்று திருமணம் செய்து கொண்டார்.  

இது தொடர்பாக திடீர் நகர் காவல் நிலையத்தில் சென்று நேற்று காதல் ஜோடிகள் பாதுகாப்பு கோரியுள்ளனர். இதனால் காவல்துறையினர் இரு வீட்டாரையும் அழைத்த போது, பெண்ணின் வீட்டார் வர மறுத்துவிட்ட நிலையில், மணமகன் தந்தையை அழைத்து அறிவுரை வழங்கி அனுப்பியுள்ளனர்.

இந்நிலையில் சிவ பிரசாத்தின் தந்தை ராமச்சந்திரனிடம் சினேகாவின் தந்தை சடையாண்டி பெரியார் பேருந்து நிலையம் அருகே வைத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது யாரும் எதிர்பாராத வேளையில், தான் மறைத்து வைத்திருந்த வாளால் ராமச்சந்திரனை வெட்டியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் காவல் நிலையத்தில் சரணடைந்த சடையாண்டியை கைது செய்த போலீசார், அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.