பெற்ற மகளையே அம்மாவாக்கிய சாமியார் தந்தை.... டி.என்.ஏ., டெஸ்டில் அம்பலம்...

பெரியகுளம் அருகே   சிறுமிக்கு குழந்தை பிறந்த விவகாரத்தில்  தந்தை கைது செய்யப்பட்டார்.

பெற்ற மகளையே அம்மாவாக்கிய சாமியார் தந்தை.... டி.என்.ஏ., டெஸ்டில் அம்பலம்...

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தேவதானப்பட்டியைச் சேர்ந்த 17வயது சிறுமிக்கு கடந்த பிப்ரவரி மாதம் 10ஆம் தேதி  தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. சிறுமிக்கு குழந்தை பிறந்தது தொடர்பாக கிடைக்கப்பெற்ற புகாரின் பேரில் தேனி அனைத்து மகளிர் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அதில் சிறுமி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அவரது உறவினரான டி.கள்ளிப்பட்டியை சேர்ந்த வல்லரசு பாண்டி என்ற இளைஞர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து மகளிர் காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.

இருந்தபோதிலும் சிறுமிக்கு பிறந்த குழந்தைக்கும் தனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என கைது செய்யப்பட்ட இளைஞர் நீதிமன்றத்தில் தெரிவித்ததை அடுத்து மரபணு சோதனைக்கு சிறுமி, அவரது குழந்தை மற்றும் வல்லரசு பாண்டி ஆகியோர் உட்படுத்தப்பட்டனர். அதில் குழந்தைக்கும், இளைஞருக்கும் தொடர்பில்லை எனத் தெரியவந்தது.

இதையடுத்து காவல்துறையினர் தொடர்ந்து  விசாரணை நடத்தி சந்தேகத்தின் அடிப்படையில் சிறுமியின் தந்தையையும் மரபணு சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அதன் முடிவில்  சிறுமிக்கு பிறந்த குழந்தைக்கு காரணம் அவரது தந்தை தான் எனத் தெரியவந்தது.  மேலும்  அவரிடம் நடத்திய விசாரணையில் சிறுமியான தனது மகளை பாலியல் தொந்தரவு செய்ததை அவரது தந்தை ஒத்துக்கொண்டார். இதையடுத்து சாமியாரான அவர் நேற்று தேனி அனைத்து மகளிர் காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பெரியகுளம் கிளைச் சிறையில் அடைத்தனர்.