மர்ம ஊசி போட்டு சிறுவன் கொலை... தந்தையே கொலை செய்தாரா..?

எடப்பாடி அருகே புற்று நோயால் அவதிப்பட்டு வந்த மகனை, தந்தையே கொலை செய்துவிட்டதாக வெளியான தகவலையடுத்து, அதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மர்ம ஊசி போட்டு சிறுவன் கொலை... தந்தையே கொலை செய்தாரா..?

சேலம் மாவட்டம், கச்சுப்பள்ளி ஊராட்சி குடைக்காரன் வளவு பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மகன் வண்ணத்தமிழ் புற்று நோயால் பாதிக்கப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஓராண்டுக்கு முன்பு சைக்கிள் ஓட்டும் போது கீழே விழுந்த வண்ணத்தமிழுக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

இதனால் புற்று நோய் அதிகமானதையடுத்து, கடந்த ஓராண்டாக எழுந்து நடக்க முடியாமலும், உறங்க முடியாமலும் சிறுவன் அவதிப்பட்டு வந்துள்ளான்.  இதனைக் கண்டு வேதனை அடைந்த அவரது தந்தை, தனது உறவினர் பிரபுவை வரவழைத்து, ஊசி ஒன்றை செலுத்தியதாகவும், இதனால் அவரது மகன் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. 

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக, போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.