காதல் திருமணம் செய்துக்கொண்ட அக்காவின் தலையை வெட்டி அதனுடன் செல்பி எடுத்துக்கொண்ட தம்பி மற்றும் தாய்...

மராட்டிய மாநிலத்தில் காதல் திருமணம் செய்துகொண்ட அக்காவின் தலையை வெட்டி அதனுடன் செல்பி எடுத்துக்கொண்ட தம்பியின் கோரச்செயல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காதல் திருமணம் செய்துக்கொண்ட அக்காவின் தலையை வெட்டி அதனுடன் செல்பி எடுத்துக்கொண்ட தம்பி மற்றும் தாய்...

மராட்டிய மாநிலம், அவுரங்காபாத் மாவட்டத்தில் உள்ள லட்கான் கிராமத்தில், காதல் திருமணம் செய்துகொண்ட தனது சகோதரியின் தலையை துண்டித்த அவரது சகோதரன் தலையுடன் சிறுவனும் அவனது தாயும் செல்பி எடுத்துள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸ் சூப்பிரண்டு நிமித் கோயல் அவர்களிடமிருந்து செல்போனை கைப்பற்றி அதிலிருந்த செல்பியை நீக்கிவிட்டு பின்னர் தடயவியல் ஆய்வுக்கு அனுப்பியுள்ளனர். மேலும் அந்த பெண்ணின் சகோதரனையும் தாயையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில்,விசாரணையின் போது அந்த சிறுவன் மராத்தி திரைப்படம் ஒன்றால் ஈர்க்கப்பட்டு இப்படி ஒரு கொலையை செய்துள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு நிமித் கோயல் கூறியுள்ளார். கொலை செய்யப்பட்ட அந்த இளம்பெண் கடந்த ஜூன் மாதம் வீட்டை விட்டு ஓடி வந்து தனது காதலனை திருமணம் செய்துள்ளார். அதன் பின்னர்,கணவருடன் இணைந்து லட்கான் கிராமத்தில் வாழ்ந்து வந்துள்ளார்.

இவர்களது திருமணம் கலப்புத் திருமணம் இல்லையென்றாலும் கூட தன்னுடைய குடும்பத்திற்கு அவமானத்தை ஏற்படுத்தி விட்டார்கள் என்ற காரணத்திற்காக அவர்களை கொலை செய்ய அந்தப் பெண்ணின் தாயும் அந்தச் சிறுவனும் திட்டமிட்டுள்ளனர். அதற்காகவே அவர்கள் இருவரும் சமரசம் ஆவதுபோல் நடித்து அந்தப் பெண்ணின் வீட்டிற்கு சென்றுள்ளனர்.

அதை உண்மை என்று நினைத்த அந்தபெண் அவர்கள் இருவருக்காகவும் சமையலறையில் டீ போட்டுக் கொண்டு இருந்தபோது, பின்புறமாக சென்ற சிறுவன் தன்னுடைய சகோதரியை அரிவாளால் வெட்டி தலையைத் துண்டித்து கொலை செய்துள்ளான். அதன் பிறகு தாயும் மகனுமாக சேர்ந்து துண்டிக்கப்பட்ட சகோதரி தலையுடன் செல்பி எடுத்துள்ளனர்.

மேலும் அந்த சிறுவன் சகோதரியின் கணவரையும் கொலை செய்ய முயற்சி செய்துள்ளான்.ஆனால் அவர் அதிர்ஷ்டவசமாக தப்பித்துள்ளார். இதற்கிடையே கொலை செய்யப்பட்ட இளம்பெண் கர்ப்பமாக இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.இதனையடுத்து அக்காவின் தலையை வெட்டி அதனுடன் செல்பி எடுத்துக்கொண்ட தம்பியின் வெறிச்செயல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது