கூலித்தொழிலாளி ஓட ஓட விரட்டி கொலை...5 பேர் கொண்ட கும்பலின் வெறிச்செயல்...!

கூலித்தொழிலாளி ஓட ஓட விரட்டி கொலை...5 பேர் கொண்ட கும்பலின் வெறிச்செயல்...!

திருச்சியில் முன்விரோதத்தால் ஏற்பட்ட தகராறில், கூலித்தொழிலாளியை 5 பேர் கொண்ட கும்பல் ஓட ஓட வெட்டி படுகொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது. 

மழைநீர் வடிகால் பிரச்சினை:

திருவெறும்பூர் அடுத்த பனையக்குறிச்சியை சேர்ந்தவர் ஜெயபால். கூலித்தொழிலாளியான இவர், மனைவி மறைவுக்கு பிறகு 6 வயது மகனுடன் வசித்து வந்தார். இந்நிலையில் ஜெயபாலுக்கும், அவரது வீட்டு அருகே வசித்து வரும் தளபதி, ஹரி உள்ளிட்டோருக்கும் இடையே மழைநீர் வடிகால் தொடர்பாக பிரச்சினை இருந்து வந்துள்ளது.  

ஓட ஓட விரட்டி கொலை:

வழக்கம்போல், இன்று காலை குடிபோதையில் வீட்டு முன் தள்ளாடியபடி நின்ற ஜெயபால், எதிரே குடியிருப்பவர்களை  ஆபாச வார்த்தைகளால் திட்டியுள்ளார். இது தொடர்பாக இரு தரப்பினரிடையே வாய்த்தகராறு முற்றியதால், ஜெயபால் தாம் வைத்திருந்த கத்தியால் அவர்களை வெட்ட முயன்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சுதாகர் மற்றும் அவரது நண்பர்கள், ஜெயபாலை ஓட ஓட விரட்டி இடுப்பு, கழுத்து பகுதியில் கத்தியால் வெட்டியும், குத்தியும் கொலை செய்தனர்.  இது தொடர்பான  சிசிடிவி காட்சி வெளியாகி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

போலீசார் விசாரணை:

இந்த கொலை சம்பவம் குறித்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருவெறும்பூர் போலீசார் மற்றும் எஸ்.பி. சுஜித் குமார் ஆகியோர் மோப்ப நாயுடன் சம்பவ இடத்தை ஆய்வு செய்தனர். பின்னர் இந்த சம்பவ தொடர்பாக, ஐவர் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் அரங்கேறிய இந்த கொடூர கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.