சினிமா சான்ஸ் வாங்கி தருகிறேன்... நிர்வாண புகைப்படம் எடுத்து பாலியல் பலாத்காரம் .. போட்டோகிராபரின் லீலை

கோவையில் சினிமா சான்ஸ் வாங்கி தருவதாகக் கூறி பாலியல் பலாத்காரம் செய்த மதுரையை சேர்ந்த போட்டோகிராபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

சினிமா சான்ஸ் வாங்கி தருகிறேன்... நிர்வாண புகைப்படம் எடுத்து பாலியல் பலாத்காரம் .. போட்டோகிராபரின் லீலை

கோவை ஒண்டிப்புதூரை சேர்ந்தவர் 25 வயது இளம்பெண். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். கணவர் கூலி வேலை செய்து வருகிறார். இளம்பெண்ணுக்கு நடிகையாக வேண்டும் என்ற ஆசை இருந்து வந்தது.

இந்தநிலையில் இளம்பெண்ணுக்கு மதுரையை சேர்ந்த போட்டோகிராபர்  ஆனந்த் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. 

பல்வேறு கோணங்களில் புகைப்படம் எடுத்தால் தான் சினிமாவில் வாய்ப்பு கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறிய போட்டோகிராபர், அவரது வீட்டிற்கு சென்று முதலில் முழு ஆடையுடன் இளம்பெண்ணை ஆனந்த் புகைப்படம் எடுத்துள்ளார்.

இளம்பெண்ணின் ஆடைகள் முழுவதையும் கழற்றி நிர்வாணமாக புகைப்படம் எடுத்தார். பின்னர் இளம்பெண்ணை மயக்கி பாலியல் பலாத்காரம் செய்தார். பின்னர் நடந்த வி‌ஷயங்களை வெளியே கூறினால் தன்னிடம் உள்ள நிர்வாண புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டினார்.

வீட்டிற்கு திரும்பிய இளம்பெண் நடந்த சம்பவங்களை தனது கணவரிடம் கூறி கதறி அழுதார். பின்னர் இது குறித்து கிழக்கு அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.

இதனால் போட்டோகிராபர் ஆனந்தை போக்சோ சட்டப்பிரிவின் கீழ் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.