பாசமான பேத்தியை பாலியல் வன்கொடுமை செய்த தாத்தா- அதிர்ச்சி சம்பவம்...

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் அருகே தாயை இழந்த சிறுமியை, தாத்தாவே பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாசமான பேத்தியை பாலியல் வன்கொடுமை செய்த தாத்தா- அதிர்ச்சி சம்பவம்...

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள மணலூர்பேட்டை அடுத்த செல்லங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் முனியாண்டி. இவர் அவரது மகள் பொன்னிக்கு அதேபகுதியை சேர்ந்த ராஜா என்பவரை கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னரே திருமணம் செய்துவைத்துள்ளார்.

இவர்கள் இருவருக்கும் ஒரு ஆண், ஒரு பெண் என இரண்டு குழந்தைகள் பிறந்துள்ளன. இதற்கிடையில் கணவர் ராஜா தனது மனைவியை பிரிந்தநிலையில், பெங்களூரில்  மற்றொரு பெண்ணை திருமணம் செய்து அங்கேயே வாழ்ந்து வருகிறார். அதன்பிறகு கணவரை பிரிந்து குழந்தைகளுடன் வாழ்ந்து வந்த பொன்னியும் சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிடுகிறார்.

அதன்பின்னர் தாயை இழந்து பரிதவித்த இரண்டு குழந்தைகளையும், பொன்னியின் தந்தையான மாயாண்டி வளர்த்து வருகிறார். இதற்கிடையில் 15 வயது எட்டிய பேத்தியுடன் தாத்தா மாயாண்டி கடந்த 3 ஆண்டுகளாக  தகாத உறவில் இருந்து வந்துள்ளார். இதனால் சிறுமி கர்ப்பமடைந்துள்ளார்.  இச்சம்பவத்தை மறைக்கும் விதமாக வீட்டை விட்டு தனது பேத்தியை வெளியில் அனுப்பாமல் பார்த்துக்கொண்ட முதியவர், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அதே பகுதியை சேர்ந்த இந்திராணி  என்பவரின் உதவியுடன் திருக்கோவிலூர் அருகே உள்ள மணம்பூண்டி பகுதியில் வசிக்கும், ஓய்வு பெற்ற செவிலியர் ராஜாமணி என்பவரிடம் கர்ப்பமாகிய பேத்தியை கூட்டி சென்று கருகலைப்பில் ஈடுபட்டுள்ளார்.

இதில் அச்சிறுமிக்கு இறந்த நிலையில் பெண் குழந்தை பிறந்துள்ளது. அக்குழந்தையை முதியவர் முனியாண்டி, தென்பெண்ணையாற்றில் புதைத்துவிட. இந்த தகவல் ஊர்முழுக்க கசிந்துள்ளது. இதனை அடுத்து கிராம நிர்வாக அலுவலர் தாமாக முன்வந்து திருக்கோவிலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், போலீஸார், முதியவர் முனியாண்டி மீதும் அவருக்கு உறுதுணையாக இருந்த அதே கிராமத்தை சேர்ந்த இந்திராணி என்பவர் மீதும், சிறுமிக்கு சட்டவிரோத கருக்கலைப்பு செய்த மணம்பூண்டி பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற செவிலியர் ராஜாமணி உள்ளிட்ட மூவர் மீதும் போக்சோ உள்ளிட்ட நான்கு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

   .