மனைவியை தீர்த்துக் கட்டிய கணவன்...கிடுக்கிப்பிடி விசாரணையில் வெளிவந்த உண்மை...!

பெரம்பலூர் அருகே தகாத உறவுக்கு இடைஞ்சலாக இருந்த மனைவியை தீர்த்து கட்டிய கணவனை போலீசார் கைது செய்தனர்.

எளம்பலூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் ராஜ்குமார், பிரவீணா தம்பதி. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில், கடந்த 22ம் தேதி பிரவீனாவை அதே பகுதியில் உள்ள அவரது உறவினர் வீட்டில் விட கணவர் ராஜ்குமார் இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்றார்.

இதையும் படிக்க : ஆவின் தீபாவளி சிறப்பு காம்போ விற்பனை...!

அப்போது வழிமறித்த ஒரு கும்பல் பிரவீனாவையும் ராஜ்குமாரையும் வெட்டி விட்டு தப்பி ஓடியது. இதில் பிரவீனா பலியான நிலையில், லேசான காயங்களுடன் ராஜ்குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில், மனைவியை கூலிப்படையை வைத்து ராஜ்குமார் கொலை செய்தது தெரியவந்தது. மேலும் வேறொரு பெண்ணுடன் ஏற்பட்ட தகாத உறவை பிரவீனா கண்டித்ததால் ஆத்திரமடைந்த ராஜ்குமார் அவரை திட்டமிட்டு கொலை செய்தது அம்பலமானது.