மனைவி தலைமேல் கல்லை போட்டு கொன்ற கணவன்...  தகாத உறவினால் வந்த பிரச்சனையா..?

தூங்கி கொண்டிருந்த மனைவி தலையில் அம்மி கல்லை போட்டு கொலை செய்த கணவன் கைது.

மனைவி தலைமேல் கல்லை போட்டு கொன்ற கணவன்...  தகாத உறவினால் வந்த பிரச்சனையா..?

திண்டிவனம் கிராண்டிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி(40). இவர் கொத்தனார் வேலை பார்த்து வருகின்றார்.

சுப்பிரமணிக்கு கடந்த 2015 ஆம் ஆண்டு சென்னை திருவல்லிக்கேணி பகுதியை சேர்ந்த கனிமொழி(24) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது.. இவர்களுக்கு 3 வயதில் மகன் உள்ளனர். திருமணமான 2 வருடத்திலேயே கணவன்,மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.

இதனையடுத்து கனிமொழி தனது மகனுடன் தாய் வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில்  சுப்பிரமணி அடிக்கடி மாமியார் நிர்மலா வீட்டிற்கு சென்று தனது மனைவியை தன்னுடன் அனுப்பி வைக்குமாறு கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி  தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும் சுப்பிரமணி வேலைக்கு செல்லாமல் சுற்றி திரிவதால் கனிமொழியை அவருடன் அனுப்ப தாய் மறுத்து வந்தார்.

நேற்று மீண்டும் சுப்பிரமணியன் மாமியார் வீட்டிற்கு வந்து மனைவி கனிமொழியை தன்னுடன் வாழ அனுப்புமாறு கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் தகராறு ஏற்பட்டு பின்னர் கனிமொழி தனது தாயுடன் அறைக்கு தூங்க சென்றனர். அனைவரும் சென்ற பின்னர் சுப்பிரமணி  யாருக்கும் தெரியாமல் மனைவி வீட்டு மொட்டை மாடிக்கு சென்று பதுங்கி உள்ளார். 

அதிகாலை கனிமொழி தனது மகனுடன் தூங்கி கொண்டிருந்த போது உள்ளே நுழைந்த கணவர் சுப்பிரமணி அருகில் இருந்த அம்மிக்கல்லை எடுத்து தூங்கி கொண்டிருந்த மனைவி கனிமொழி தலையில் அடித்து கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றார். இதில் கனிமொழி துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பலியானார்.

அலறல் சத்தம் கேட்டு எழுந்து ஓடிவந்த தாய் நிர்மலா மகள் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைத்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன் பேரில் ஐஸ் ஹவுஸ் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கனிமொழி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையில் கணவர் சுப்பிரமணி மனைவியை கொலை செய்து விட்டதாக கூறி ஜாம்பஜார் காவல் நிலையத்தில் சரண்டைந்தார். ஜாம்பஜார் போலீசார் அளித்த தகவலின் பேரில் அங்கு சென்ற ஐஸ்ஹவுஸ் போலீசார்  சுப்பிரமணியை கைது செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் கனிமொழிக்கு கடந்த 3 வருடங்களாக வேறொரு நபருடன் தகாத உறவு இருந்து வந்ததால் ஆத்திரமடைந்த கணவர் சுப்பிரமணி மனைவியை கொலை செய்தது தெரியவந்ததுள்ளது.