கஞ்சா விற்பனை.. பிடிக்க சென்ற காவலர்கள் மீது நாட்டு வெடிக்குண்டு வீச்சு.. பெரும் பரபரப்பு

கஞ்சா விற்பனை.. பிடிக்க சென்ற காவலர்கள் மீது நாட்டு வெடிக்குண்டு வீச்சு.. பெரும் பரபரப்பு

அரக்கோணத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர்களை பிடிக்க சென்ற காவலர்கள் மீது நாட்டு வெடிக் குண்டுகளை வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் திருமலை ஆச்சாரி தெருவில் கஞ்சா விற்பனை நடைபெற்றுவருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் நகர காவலர்கள் சந்தோஷ், ஏழுமலை ஆகியோர் அப்பகுதிக்கு சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது சிறுவன் ஒருவர் காவலர்கள் மீது நாட்டு வெடிக்குண்டுகளை வீசிவிட்டு தப்பியோடியுள்ளார். இதில் இரண்டு காவலர்கள் உட்பட 3 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் தலைமறைவாக இருந்த சிறுவனை போலீசார் கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.