ஊழியர்களே பணத்தை கையாடல் செய்த சம்பவம்...! நான்கு பேர் கைது...!

ஊழியர்களே பணத்தை கையாடல் செய்த சம்பவம்...! நான்கு பேர் கைது...!

வடசென்னை திருவொற்றியூர் பகுதியில் இயங்கிவரும் நுண்கடன் நிறுவனத்தில் வசூலிப்பு துறை மேலாளராக பணிபுரிந்து வரும் யேசு தாஸ் என்பவர் தங்கள் கிளை நிறுவனத்தில் பணியாற்றி வரும் டானியல்(36), அருள் செல்வம்(36), சசிகுமார்(40), சரவணன்(37), சுரேஷ் ஆகியோர் நிறுவனத்திற்கு சொந்தமான 7,32,236  ரூபாயை கையாடல் செய்ததாக கூறி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென திருவொற்றியூர் காவல் நிலைய குற்றப்பிரிவில் கடந்த ஜீலை மாதம் 21-ஆம் தேதி புகார் அளித்திருந்தார்.

அந்த புகாரினை பெற்று கொண்ட திருவொற்றியூர் காவல் துறையினர் தலைமறைவாக இருந்த 5 பேரையும் தேடிவந்த நிலையில் நால்வரை கைது செய்து நீதீமன்ற விசாரணைக்கு பின் சிறையில் அடைத்தனர். மேலும் இதில் தொடர்புடைய சுரேஷ் என்பவர் தலைமறைவாக உள்ள நிலையில் அவரையும் போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர். இந்த சம்பவம் அந்த நுண்கடன் நிறுவனத்தின் வாடிக்கையாளர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.