கிருஷ்ணகிரியில் தொடரும் ஆணவக் கொலைகள்....!!

கிருஷ்ணகிரியில் தொடரும் ஆணவக் கொலைகள்....!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த அருணகிரி கிராமத்தில் வசித்து வருபவர் தண்டபாணி.  இவரின் மகன் சுபாஷ் வயது 25.  கடந்த 15 மாதங்களுக்கு முன்பு திருப்பூரில் இருந்து காதல் திருமணம் செய்து அவரது பாட்டி ஊரான அருணபதியில் தங்கி உள்ளார்.  இதனை அறிந்து அங்கு வந்த தண்டபாணி அதிகாலையில் தூங்கிக் கொண்டிருந்த சுபாஷ் மற்றும் அவர்களின் மனைவி அனுஷ்கா அவரின் பாட்டி கண்ணம்மாள் ஆகிய மூவரையும் சரமாரியாக வெட்டியுள்ளார்.

இதில் படுகாயம் அடைந்த பாட்டி  கண்ணம்மாவும் பேரன் சுபாஷ்ஷும் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர்.  வெட்டுப்பட்ட அனுஷ்கா அருகே உள்ள முட்புதரில் ஒளிந்து உள்ளார்.  அவரும் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் இருந்ததை கண்ட அப்பகுதி மக்கள் தகவல் கொடுத்ததன் பேரில் அவரை ஊத்தங்கரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். 

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் படுகொலை செய்யப்பட்டது சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.  தண்டபாணி தனது மகன் சுபாஷ் காதல் திருமணம் செய்ததை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதுடன் அனுஷ்கா தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது.  இது குறித்து இவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது இதனால் தண்டபாணி ஆணவக் கொலை செய்துள்ளதாக தெரிகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு காவேரிப்பட்டினம் அருகே நடுரோட்டில் மாமனாரே மருமகனை கொன்ற சம்பவம் பரபரப்பு அடங்குவதற்குள் தற்போது ஊத்தங்கரை அடுத்த அருணபதி  பகுதியில் இந்தத் ஆணவக்  கொடூர கொலை ஏற்பட்டுள்ளது பெரும் பரபரப்பையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொடர் ஆணவக் கொலைகள் நடைபெற்று வருவது பொதுமக்கள் மற்றும் காவல்துறையினர் இடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிக்க:  தவறான சிகிச்சை... போராட்டத்திற்கு பிறகு பெறப்பட்ட புகார்!!