வீடுகளை லீசுக்கு விட்டு 5 கோடி ரூபாய் வரை மோசடி செய்த நபர் கைது...
சென்னையில் பல்வேறு நபர்களுக்கு வீட்டை லீசுக்கு விட்டு 5 கோடி ரூபாய் வரை மோசடி செய்த நபரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தாம்பரத்தில் சாலையோரம் நின்று கொண்டிருந்த பேருந்து தீப்பிடித்து எரிந்தது. இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அடுத்த தாம்பரம் பஸ் நிலையம் அருகே, ஜிஎஸ்டி சாலை ஓரம், தனியார் நிறுவனங்களுக்கு ஊழியர்களை ஏற்றி செல்லும் பேருந்து ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இன்று அதிகாலை, குரோம்பேட்டையில் இருந்து தாம்பரம் நோக்கி, படு வேகமாக இரு சக்கர வாகனத்தில் வாலிபர் ஒருவர் வந்து கொண்டிருந்தார்.
ஒரு கட்டத்திற்கு மேல் கட்டுப்பாட்டை இழந்த நிலையில், ஓரமாக நின்று கொண்டிருந்த பேருந்தின் பின்பகுதியில், அந்த இருசக்கர வாகனம் மோதியது. ஏற்கனவே வேகமாக வந்த வண்டி, கட்டுப்பாட்டை இழந்ததால், மேலும் வேகமாக நிறுத்த ம்டுஇயாத நிலைஇல் பேருந்தில் மோதி, இரு சக்கர வாகனம் தீப்பிடித்தது. இதனைத் தொடர்ந்து அந்த நிறுத்தப்பட்டிருந்த பேருந்தும் எரிய தொடங்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இரு சக்கர வாகனத்தை ஓடிய வாலிபர், தீப் பரவ தொடஙியதும் அங்கிருந்த் தப்பி ஓடிய நிலையில், அந்த இரு சக்கர வாகனமும், தனியார் பேருந்தும் கொழுந்து விட்டு எரிந்தது.
தகவல் அறிந்த தாம்பரம் தீயணைப்பு படையினர் மற்றும் தாம்பரம் போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், அதற்குள் பஸ் முழுவதுமாக எரிந்து சேதமானது. இந்த விபத்து குறித்து தாம்பரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தொடர்ந்து பல காவலர்கள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில், தற்போது மேலும் இரண்டு போலீசார் தற்கொலை முயற்சி செய்து உயிரிழந்துள்ளனர்.
நெல்லை மாவட்டம் அம்பை அருகேயுள்ள மணிமுத்தாறில் 9 மற்றும் 12 -ம் அணி காவலர் பயிற்சி பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு போலீசார் உள்பட சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயிற்சி காவலர்கள் உள்ளனர். இந்த நிலையில் மதுரை பகுதியை சேர்ந்த 2016 பேட்ஜ் போலீஸ் தமிழ்செல்வன் (வயது 29) என்பவர் மணிமுத்தாறு 12 -ம் அணி பட்டாலியனில் காவலராக பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் கடந்த 5 -ந் தேதி பட்டாலியனில் உள்ள அறையில் திடீரென தனது உடலில் மண் எண்ணையை உற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். உடனடியாக இதுகுறித்து தகவலறிந்த கல்லிடைக்குறிச்சி போலீசார் தமிழ்செல்வனை சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தொடர் சிகிச்சையில் இருந்து வந்த காவலர் தமிழ்செல்வன் நேற்று நெல்லை அரசு மருத்துவமனையிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து போலீசார் விசாரணையில், தமிழ் செல்வன் திருமணமாகாத விரக்த்தியில் தீக்குளித்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து, தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் தனியார் விடுதியில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட காவல் உதவி ஆய்வாளர் பார்த்திபன் உடல் உடற்கூறுஆய்வுக்கு பின்னர் மனைவி மற்றும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. முன்னதாக அங்கு வந்த நீதிபதிகள் ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் மற்றும் நெல்லை மாவட்ட முதன்மை நீதிபதி குமரகுரு காவல் உதவி ஆய்வாளர் பார்த்திபனின் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அதன் பின்னர் இறுதி சடங்கிற்காக பார்த்திபனின் சொந்த ஊர் ஆன திருத்தணிக்கு உடல் அனுப்பி வைக்கப்பட்டது. இந்த இரு சம்பவங்களும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை அருகே இருசக்கர வாகனம் மீது தனியார் பேருந்து மோதியதில் கட்டிட தொழிலாளி பலி தனியார் பேருந்து ஓட்டுனருக்கு தர்ம அடி கொடுத்த பொதுமக்கள் பேருந்து கண்ணாடியை அடித்து நொறுக்கியதால் பரபரப்பு
நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் இருந்து சேரன்மகாதேவி வழியாக, திருநெல்வேலிக்கு இன்று மாலை தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தின் ஓட்டுநராக சக்திவேல் இருந்துள்ளார். இந்த பேருந்து முன்னீர் பள்ளம் அருகே உள்ள தருவை அருகே வந்தபோது, இருசக்கர வாகனத்தில் மோதியுள்ளது.
நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி குமார் என்பவர், தனது வண்டியில் சாலையை கடக்கும் போது அவர் மீது பேருந்து மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே கட்டிட தொழிலாளி குமார் உயிரிழந்தார். அப்போது அந்த பகுதியில் இருந்த பொதுமக்கள் ஆத்திரமடைந்து தனியார் பேருந்து ஓட்டுனர் சக்திவேலை பேருந்தில் இருந்து கீழே இறக்கி விட்டு தர்ம அடி கொடுத்தனர். இதன் பிறகு பேருந்து கண்ணாடிகளை பொதுமக்கள் அடித்து நொறுக்கினர்.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் முன்னீர்பள்ளம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, கட்டிட தொழிலாளி குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தனியார் பேருந்து ஓட்டுனர் சக்திவேலை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இதுகுறித்து முன்னீர் பள்ளம் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
கர்நாடக மாநிலத்தில் குடும்ப நல நீதிமன்ற வளாகத்திலேயே மனைவியை, வெட்டிக் கொன்ற கணவன் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம், சன்னராயனபட்னா தாலுக்கா ஹொலே நரசிபுரா பகுதியை சேர்ந்தவர்கள், சைத்ரா மற்றும் சிவக்குமார். இவர்களுக்கு கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், கடந்த இரண்டு வருடங்களாக இருவருக்கும் கருத்து வேறுபாடு இருந்து வந்தது. இதனால் தொடர்ந்து சண்டையிட்டு வந்த நிலையில், சிவக்குமார் சைத்ராவை தாக்கியதாக வழக்கு பதிவு செய்தனர். மேலும், இருவரும் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்திருந்தனர்.
நேற்று சனிக்கிழமை காலை சன்னராயனபட்னாவில் உள்ள குடும்ப நல நீதிமன்றத்தில் இருவரும் வழக்கு விசாரணைக்கு ஆஜராகி இருந்த நிலையில், சுமார் ஒரு மணி நேரம் நீதிபதி இருவருக்கும் சேர்ந்து வாழ ஆலோசனை வழங்கியுள்ளார். இரண்டு குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சேர்ந்து வாழ, நீதிபதி அறிவுரை வழங்கிய நிலையில் அதை ஏற்றுக் கொண்ட சிவக்குமார் நீதிமன்ற அறையில் இருந்து வந்துள்ளார்.
பின்னர், சைத்ரா கழிப்பறை அருகே சென்றபோது தனது பையில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சைத்ராவின் கழுத்தில் சிவகுமார் பலமாக வெட்டியுள்ளார். பின்பு சைத்ராவுடன் இருந்த தனது மகனையும் கொலை செய்ய முயற்சி செய்துள்ளார். அப்போது அருகில் இருந்த பொதுமக்கள், சிவக்குமாரை தாக்கி அங்கிருந்த காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். பின்னர் காவல்துறையினர் சிவகுமாரை கைது செய்து, சைத்ராவை ஆம்புலன்ஸ் வாகனத்தில் சிகிச்சைக்காக சன்னராயனபட்னா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின் ஹாசன் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கழுத்தில் இருந்த முக்கிய நரம்புகள் வெட்டுப்பட்டதால் சைத்ரா, வழியிலேயே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். நீதிமன்ற வளாகத்திலேயே கணவன் மனைவியை வெட்டி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆலங்குடியில் சட்டவிரோத விற்பனைக்காக டாட்டா சுமோ வாகனத்தில் கடத்திச் செல்லப்பட்ட 430 மது பாட்டில்களை தனிப்படை போலீசார் துரத்தி சென்று பறிமுதல் செய்துள்ள நிலையில் போலீசாரை கண்டதும் வாகனத்தை சாலையில் நிறுத்திவிட்டு தப்பியோடிய மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அண்ணா நகர் பகுதியில் சட்டவிரோதமாக இரவு மற்றும் அதிகாலை வேலைகளில் மது விற்பனை பல இடங்களில் நடப்பதாக புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் காவல்துறை உதவி ஆய்வாளர் சிவக்குமார் தலைமையில் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை கைது செய்ய மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவிட்டிருந்தார்.
அதன் பேரில் தனிப்படை போலீசார் கடந்த சில நாட்களாக ஆலங்குடி பகுதியில் இரவு நேர ரோந்து பணிகளில் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர். அதன் ஒரு பகுதியாக ஆலங்குடி அண்ணாநகர் பகுதியில் தனிப்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது வேகமாக வந்த ஒரு டாடா சுமோ வாகனத்தை சந்தேகத்தின் பேரில் தனிப்படை போலீசார் விரட்டி சென்றபோது சாலையின் ஓரத்தில் அந்த டாட்டா சுமோ வாகனத்தை நிறுத்திவிட்டு அதிலிருந்து நபர்கள் தப்பி சென்றனர்.
இதனையடுத்து அந்த வாகனத்தை தனிப்படை போலீஸார் சோதனையிட்ட போது அதில் 430 மது பாட்டில்கள் இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து கடத்தலுக்கு பயன்பட்ட டாடா சுமோ வாகனம் மற்றும் 50 ஆயிரம் மதிப்புள்ள மது பாட்டில்களை பறிமுதல் செய்த தனிப்படை போலீசார் அவற்றை ஆலங்குடி காவல் நிலையத்தில் ஒப்படைத்து விட்டு தப்பியோடிய கடத்தல் கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர்.