சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர்...! போக்சோவில் கைதான சம்பவம்...!

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர்...! போக்சோவில் கைதான சம்பவம்...!

சென்னை கோயம்பேட்டில் பள்ளி சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் தொல்லை கொடுத்த நபரை போக்சோ வழக்கில் கைது செய்துள்ளனர்.

சென்னை கோயம்பேடு பகுதியை சேர்ந்த ஒருவர் நேற்று கோயம்பேடு காவல்நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த புகாரில் தனது 16 வயது  மகளிடம் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த பாலாஜி(22) என்பவர் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி வெளியே அழைத்து சென்றுள்ளார். மேலும் இவர் இதே பகுதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் வசித்து வருவதாகவும், தனது மகளை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும், அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி புகாரில் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக கோயம்பேடு போலீசார் இன்று காலை சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை கைது செய்தனர். பின்னர் போலீசார் இந்த வழக்கை வளசரவாக்கம் அனைத்து மகளிர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். பின்னர் மகளிர் போலீசார் பாலாஜி மீது போக்சோ வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த உள்ளனர்.