காதலியை ஆபாசமாக படம் எடுத்து மிரட்டிய முன்னாள் காதலன் கைது...

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே முன்னாள் காதலியை ஆபாசமாக படம் எடுத்து மிரட்டிய நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.  

காதலியை ஆபாசமாக படம் எடுத்து மிரட்டிய முன்னாள் காதலன் கைது...

திருச்சி துவாக்குடி பகுதியை சேர்ந்தவர் சதீஷ். இவர் அதே பகுதியை சேர்ந்த பெண்ணை காதலித்ததுடன்  இருவரும் காஞ்சிபுரத்தில் வேலை  பாரத்த  போது  ஒரே வீட்டில்  தங்கி   குடும்பம் நடத்தியதாக கூறப்படுகிறது. சில  காரணங்களால் இருவரும் பிரிந்த நிலையில் கடந்த ஆண்டு சதீஷ்  வேறொரு பெண்ணை காதல்  திருமணம் செய்ததாக தெரிகிறது.

இதனிடையே  முன்னாள் காதலியை  தொடர்பு கொண்ட சதீஷ் தன்னுடன் பழக வேண்டும் என்று  கட்டாயப்படுத்தியுள்ளார். மேலும் தனது விருப்பத்தை ஏற்க  மறுத்தால் தாம் எடுத்து வைத்திருந்த  ஆபாச வீயோவை வெளியிடுவேன் என்று மிரட்டியுள்ளார். இதுகுறித்து பெண்ணின் பெற்றோர் திருவெறும்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த சம்பவம் குறித்து 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் சதீஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.