கல்லூரியில் கைவரிசை காட்ட முயன்ற நபர்.. சுற்றி வளைத்த காவலர்கள்.. இருவர் தப்பியோட்டம்!

காரைக்காலில் பூட்டியிருந்த தனியார் கல்லூரியில் திருட முயன்ற நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கல்லூரியில் கைவரிசை காட்ட  முயன்ற நபர்.. சுற்றி வளைத்த காவலர்கள்.. இருவர் தப்பியோட்டம்!

காரைக்கால் அடுத்த மண்டபத்தூர் பகுதியில் பாரதியார் பொறியியல் தனியார் கல்லூரி உள்ளது. விடுமுறை நாட்கள் என்பதால் கல்லூரி முடப்பட்டுள்ளது.

இந்நிலையில் கல்லூரியின் மெக்கானிக்கல் துறையின் ஆய்வகத்தில் புகுந்து மூன்று பேர் 35 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் திருடிச் சென்றுள்ளனர். இதனையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் மூன்று பேரையும் சுற்றி வளைத்து பிடிக்க முயன்ற போது இருவர் தப்பியோடிய நிலையில் ஒருவரை பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். இதனையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய இருவரை தேடி வருகின்றனர்.