ஆணவக்கொலை செய்த தந்தை... கைது செய்த போலீசார்...!!

ஆணவக்கொலை செய்த தந்தை... கைது செய்த போலீசார்...!!

கிருஷ்ணகிாி மாவட்டத்தில் வேறு சாதி பெண்ணை திருமணம் செய்து கொண்ட மகனை ஆணவக்கொலை செய்த தந்தையை போலீசாா் கைது செய்துள்ளனா். 

கிருஷ்ணகிாி மாவட்டத்தில் ஊத்தங்கரையில் வேற்று சமூகத்தை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்த மகனை தந்தையே வெட்டிக் கொன்ற நிலையில் அவரை போலீசார் கைது செய்துள்ளனர். அருணபதி கிராமத்தை சேர்ந்த சுபாஷ் என்பவா் பெற்றோா் எதிா்ப்பை மீறி வேறு சாதியை சோ்ந்த அனுசுயா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டாா். இதில் ஆத்திரத்தில் இருந்த சுபாஷின் தந்தை தண்டபானி அாிவாளால் சுபாஷ் மற்றும் அனுசுயா மற்றும் அவரது தாய் கண்ணம்மா ஆகியோரை சரமாாியாக வெட்டியதில் சுபாஷ் மற்றும் கண்ணம்மா இருவரும் உயிாிழந்தனா்.  

இதுகுறித்து போலீசாா் விசாாித்து தண்டபாணியை தேடி வந்தநிலையில் நேற்று மாலை தர்மபுரி மாவட்டம் தீர்த்தமலை பகுதியில் சுற்றித்திரிந்த அவரை கைது செய்துள்ளனர். போலீசார் சுற்றி வளைத்து கைது செய்ய முயலும் பொழுது அவர் தனக்கு தானே கழுத்தை கத்தியால் அறுத்து கொண்டாா். உடனே போலீசாா் அவரை கைது செய்து மருத்துவமனையில் அனுமதித்துள்ளனா்.