கல்லூரி மாணவியை நண்பரே கற்பழிக்க முயன்ற அதிர்ச்சி சம்பவம்

மைசூருவில் கல்லூரி மாணவியை அவரது நண்பரே கற்பழிக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கல்லூரி மாணவியை நண்பரே கற்பழிக்க முயன்ற அதிர்ச்சி சம்பவம்

கர்நாடக மாநிலம் மைசூரு சாமுண்டி மலை அடிவாரத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு  ஆண் நண்பருடன் சென்ற ஒரு இளம்பெண்ணை 7 பேர் கொண்ட கும்பல் கற்பழித்தனர். இந்த சம்பவம் கர்நாடகத்தையே உலுக்கியது. இந்த நிலையில் மைசூருவில் அதேபோல் மற்றொரு சம்பவம் நடந்துள்ளது.


மைசூரு என்.ஆர்.மொகல்லா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வருபவர் 21 வயது இளம்பெண். இவர் மைசூருவில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இவரும், இவருடன் படித்து வரும் ஒரு வாலிபரும் நட்பாக பழகி வந்தனர். மேலும் என்.ஆர்.மொகல்லா பகுதியில் உள்ள ஒரு தனியார் படிப்பகத்துக்கு அடிக்கடி இருவரும் சென்று படித்து வந்தனர்.

அதேபோல் இருவரும் நேற்று மாலை  அந்த படிப்பகத்துக்கு சென்று படித்துக் கொண்டிருந்தனர். மாலை நேரம் ஆனதால் அங்கிருந்த அனைவரும் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இதனை சாதகமாக பயன்படுத்திய அந்த வாலிபர், திடீரென தனது தோழியான இளம்பெண்ணை கற்பழிக்க முயன்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண் கூச்சலிடவே, ஆத்திரமடைந்த வாலிபர் இளம்பெண்ணை சரமாரியாக தாக்கி கற்பழிக்க முயன்றார்.

இளம்பெண்ணின் சத்தம் கேட்டு அங்கு ஒடி வந்த பொதுமக்களை, பார்த்த வாலிபர் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். பின்னர் அப்பகுதி மக்கள் இளம்பெண்ணை மீட்டனர்.பின்னர் அவர்கள் இதுபற்றி என்.ஆர்.மொகல்லா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இளம்பெண்ணிடம் விசாரணை நடத்தினர்.  மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த வாலிபரை பிடித்து விசாரித்து வருகிறார்கள்.