“பாஜகவில் பணம் கொடுத்து பொறுப்பு வாங்கும் நிலை....” பாஜக பிரமுகர்!!

“பாஜகவில் பணம் கொடுத்து பொறுப்பு வாங்கும் நிலை....” பாஜக பிரமுகர்!!

பாஜக நிர்வாகி  ஹரிஷை 1 முறை தான் சந்தித்துள்ளதாகவும், பாஜகவில் சேர அவரிடம் பணம் பெறவில்லை எனவும் மறுத்துள்ளார்.

பண மோசடி:

சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு  வந்த ஆருத்ரா கோல்டு டிரேடிங் நிறுவனம் 2400 கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டது.  இந்த வழக்கில் இதுவரை 11 நபர்கள் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்துள்ளனர்.  

பாஜக பிரமுகர்:

இவ்வழக்கில் சமீபத்தில் கைது செய்யப்பட்ட பாஜக நிர்வாகியும், இயக்குனருமான ஹரிஷை 11 நாட்கள் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை செய்தனர்.  விசாரணையில் ஹரிஷ் பாஜகவில் பொறுப்பு வாங்க முதலீட்டாளர்களிடம் மோசடி செய்த பணத்தை பயன்படுத்தி இருப்பதும், அந்த பணத்தை பாஜகவில் சிலருக்கு வழங்கி இருப்பதும் தெரியவந்துள்ளது. 

கட்சியில் பதவி:

பணம் பெற்றுக்கொண்டு பாஜக வழக்கறிஞர் பிரிவை சேர்ந்த அலெக்ஸ் மற்றும் பாஜக ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த சுதாகர் ஆகியோர் பதவி வாங்கி கொடுத்ததாக விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.  குற்றஞ்சாட்டப்பட்ட இருவரையும் அசோக் நகரில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜராக சம்மன் பிறப்பித்தனர்.

விளக்கம்:

இந்த சம்மன் அடிப்படையில் பாஜக வழக்கறிஞர் பிரிவு சேர்ந்த அலெக்ஸ் பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜராகி அதிகாரிகள் கேட்ட கேள்விக்கு 1 மணி நேரமாக விளக்கமளித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பாஜக பிரமுகர் அலெக்ஸ், ஆருத்ரா நிறுவன வழக்கு தொடர்பாக ஆஜராகி பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜராகி அவர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்ததாக அவர் கூறினார். 

தொடர்பில்லை:

பாஜக நிர்வாகி ஹரிஷ் ஆருத்ரா வழக்கு தொடர்பாக தன்னிடம்  வந்ததாகவும், அவருக்கு சில ஆலோசனைகள் வழக்கறிஞர் என்ற முறையில் அளித்ததாகவும், அவரை இதுவரை ஒரு முறை தான் சந்தித்தாகவும், 5 முறை செல்போனில் பேசியதாகவும் மற்றப்படி ஒரு தொடர்புமில்லை என அவர் தெரிவித்தார்.  மேலும் தமிழ்நாட்டை பொறுத்தவரையில் பாஜகவில் பணம் கொடுத்து பொறுப்பு வாங்கும் நிலை இல்லை எனவும் அந்த நிலைமை எப்போதுமே வராது எனவும் அவர் கூறினார். 

பண பரிவர்த்தனை:

மேலும் போலீசார் கூறியபடி ஹரிஷூக்கும் எனக்கும் எந்த பண பரிவர்த்தனையும்  நடைபெறவில்லை எனவும் அது தொடர்பான அனைத்து ஆவணங்களையும் போலீசாரிடம் சமர்பித்து இருப்பதாகவும் அவர் கூறினார்.  தன்னை பற்றி போலீசார் வெளியிட்ட அறிக்கை குறித்து விளக்கம் கொடுத்து இருப்பதாகவும், மறு விசாரணை நடத்த இருப்பதாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்திருப்பதாகவும் அவர் கூறினார்.

இதையும் படிக்க:   இயக்குனர் லிங்குசாமிக்கு 6 மாதம் சிறை தண்டனை...!!