மனைவியுடன் சேரவிடாமல் தடுத்த தாயை... தந்தையுடம் சேர்ந்து கொலை செய்த மகன்

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே மனைவியுடன் சேர விடாமல் தடுத்த தாயை, தந்தையும், மகனும் சேர்ந்து கழுத்தை நெறித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மனைவியுடன் சேரவிடாமல் தடுத்த தாயை... தந்தையுடம் சேர்ந்து கொலை செய்த மகன்

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள ஜமீன்சிங்கப்பட்டியை சேர்ந்தவர் முருகன், இவர் வில்லுபாட்டு தொழில் செய்து வருகிறார். இவருடைய மனைவி சங்கரம்மாள். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். முருகனின் மகனான தளவாய் சாமி, தனது சொந்த மாமன் மகளை திருமணம் செய்துள்ளார். இவருடைய மனைவி தனியார் கல்லூரியில் 3- ம் ஆண்டு படித்து வருகிறார்.

இதற்கிடையில் இன்று காலை தகப்பனும், மகனும் அக்கம்பக்கத்தில் இருப்பவர்களிடம் சங்கரம்மாள் கட்டிலில் தூங்கும்பொழுது  கீழே விழுந்ததில் மூக்கில் அடிபட்டு இறந்துவிட்டார் என்று கூறியுள்ளனர். மேலும் இது சம்பந்தமாக கல்லிடைகுறிச்சி போலீசாருக்கு தகவல் கிடைக்கவே விரைந்து வந்து உடலை கைபற்றி விசாரணையில் இறங்கினர்

இச்சம்பவம் தொடர்பாக போலீசார், மகன் மற்றும் தந்தையிடம் விசாரணை செய்துள்ளனர். விசாரணையில் இருவரும் முன்னுக்கு பின் முரணாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் சந்தேகமடைந்த போலீசார், இருவரிடம் தீவிரமாக விசாரிக்க தொடங்கினர்.

அதில் சங்கரம்மாளை கொலை செய்தது நாங்கள் தான் என்பதை இருவரும் ஒப்புகொண்டனர்.  விசாரனையில், மகனும்- மருமகளும் சேர்ந்திருந்தால், மருமகளின் இறுதியாண்டு படிப்பை முடிப்பதில் சிக்கல் ஏற்படும் என நினைத்த சங்கரம்மாள் தன் அண்ணனின் அனுமதியுடன் இருவரையும் சேரவுடாமல் தடுத்து வந்ததாக கூறப்படுகிறது. மனைவியிடம் சேர விடாமல் தடுக்கும் மீது மகன் தளவாய் சாமி மிகுந்த ஆத்திரத்தில் இருந்ததாக தெரிகிறது.

மேலும் சங்கரம்மாள் தன் கணவன் முருகனை  அடிக்கடி தகாத வார்த்தைகளால் வசைபாடுவதும் வழக்கமாக இருந்துள்ளது.  இதனால் கணவரும் தன் மனைவி மேல் கோபத்தில் இருந்துள்ளார். இந்நிலையில்தான் நேற்று இரவு தந்தை - மகனும் சேர்ந்து சங்கரம்மாள் கழுத்தை நெறித்து கொலை செய்ய முயற்சி முயற்சி செய்துள்ளனர் இந்த போராட்டத்தில் கட்டிலில் இருந்து கீழே விழுந்த சங்கரம்மால் மூக்கில் அடிப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

முதலில் இயற்கை மரணம் என பதிந்த காவல்துறையினர், அதன் பின் தன்நேர்த்தியான விசாரணையில் இது கொலை என கண்டுபிடித்து தந்தையையும், மகனையும் கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.