தந்தையை கத்தியால் சரமாரியாக வெட்டிக்கொன்ற மகன்.! ஏன் தெரியுமா?

கருத்து வேறுபாடு காரணமாக தந்தையை மகனே சரமாரியாக வெட்டிக்கொன்ற சம்பவம் ராணிப்பேட்டையில் அரங்கேறியுள்ளது.

தந்தையை கத்தியால் சரமாரியாக வெட்டிக்கொன்ற மகன்.! ஏன் தெரியுமா?

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த வேப்பூரை சேர்ந்தவர் இக்பால். கூலி தொழிலாளியான இவருக்கு இம்ரான் என்ற மகன் உள்ளார். இக்பால், மனைவி இறந்து விட்டதால் தனது மகனுடன் வசித்து வந்தார். ஆனால் தந்தை - மகன் இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு நடந்து வந்துள்ளது.

இந்நிலையில் வழக்கம்போல் இன்று காலை 11 மணி அளவில் மீண்டும் இருவரும் சண்டையிட்டு கொண்டுள்ளனர். இதில் ஆத்திரமடைந்த மகன் இம்ரான் தந்தை என்றும் பாராமல் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த இக்பால் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

பின்னர் இது குறித்து அப்பகுதி மக்கள் அளித்த புகாரின்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார், இக்பாலின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தந்தையை வெட்டி கொன்ற மகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.