வெள்ளி கொலுசுக்காக பெண்ணின் கால்களை துண்டித்து கொலை செய்த கொடூர திருடன்...

வெள்ளி கொலுசுக்காக ராஜஸ்தானில் பெண்ணின் கால்களை துண்டித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

வெள்ளி கொலுசுக்காக பெண்ணின் கால்களை துண்டித்து கொலை செய்த கொடூர திருடன்...

ராஜஸ்தானில் ராஜ்சமந்த் மாவட்டம் சார்புஜா என்ற பகுதியில் கன்குபாய்  என்ற 45வயது  பெண் தனது கணவருக்கு உணவு எடுத்துக் வயலுக்கு சென்றார் . அதன்பிறகு அவர் அங்கிருந்து வீடு திரும்பினார்.மாலை கணவர் வீட்டுக்கு சென்ற போது அப்பெண் வீட்டில் இல்லை. காலையில் உணவு எடுத்துக்கொண்டு சென்றவர் அதன்பின் வீடு திரும்பவில்லை என தெரியவந்தது. இதனையடுத்து உறவினர்கள் அந்தப்பெண்ணை தேடினர். இரவு முழுவதும் தேடியும் அந்தப்பெண் கிடைக்கவில்லை. 

இதனையடுத்து போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் காட்டுப்பகுதியில் அந்தப்பெண் சடலமாக கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்த போது பின்னங்கால்கள் வெட்டப்பட்ட நிலையில் சடலமாக கிடந்தார். அவர் காலில் அணிந்திருந்த வெள்ளிக்கொலுசுகள் திருடப்பட்டிருந்தது.

இதனையடுத்து அந்தப்பெண்ணின் உடலை கைப்பற்றிய போலீஸார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வெள்ளிக்கொலுசுகளுக்காக இந்தக் கொலை நடந்திருப்பதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். கால்களை வெட்டி கொலுசை திருடிய திருடன் அந்தப் பெண்ணின் கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளதாக போலீஸார் கூறியுள்ளனர். இந்த சம்பவம் ராஜஸ்தான் மாநிலத்தில் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில வாரங்களுக்கு ஜெய்பூர் பகுதியில் இதேபாணியில் 55 வயது மதிக்கத்தக்க பெண் கொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.