கணவனை கொன்று புதைத்த மனைவி...! மூன்றே நாளில் உயிருடன் வந்த கணவன்...!

கணவனை கொன்று புதைத்த மனைவி...!  மூன்றே நாளில் உயிருடன் வந்த கணவன்...!

ஒன்றரை வருடத்திற்கு முன்பு காணாமல் போன கணவரை கொன்று புதைத்ததாக மனைவி போலீசில் வாக்குமூலம்  அளித்ததை தொடர்ந்து புதைத்ததாக கூறப்பட்ட இடங்களில் உடல் பாகங்களை தேடும் பணி கடந்த மூன்று நாட்களாக நடந்து வந்த நிலையில், இறந்ததாக கூறப்பட்ட வாலிபர் தற்போது தொடுபுழாவில் வைத்து உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

கேரளா மாநிலம் பத்தனாபுரம் பகுதியை அடுத்த பாடம் பகுதியை சார்ந்தவர் நவ்ஷாத் - நூறநாடு என்னும் பகுதியை சார்ந்தவர் அப்சானா ( Afsana ) - இவர்களுக்கு திருமணம் ஆகி இரண்டு ஆண் குழந்தைகளும் உள்ளனர்.

நவ்ஷாத் மீன் விற்பனை மற்றும் கார் ஓட்டுநராக வேலை பார்த்தும் வந்துள்ளார்.மனைவி மற்றும் குழந்தைகளுடன் சேர்ந்து அடூர் - பருத்திப்பாறா பகுதியில் உள்ள வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர். இருவருக்கும் இடையே குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஒன்றரை வருடங்களுக்கு முன்பு நவ்ஷாத் திடீரென காணாமல் போய் உள்ளார்.இதை அடுத்து குடும்பத்தார் கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் 5ஆம் தேதி கூடல் காவல் நிலையத்தில் நவ்ஷாத் காணாமல் போனதாக புகார் அளித்துள்ளனர்.புகாரின் அடிப்படையிலும் போலீசார் தொடர்ந்து நவ்ஷாதை தேடியும் வந்துள்ளனர்.எனினும் நவ்ஷாதை கண்டுபிடிக்க முடியவில்லை.

மூன்று நாட்களுக்கு முன்பு கூடல் காவல் நிலையத்திற்கு தொலைபேசியில் அழைத்த அப்சானா அடூர் பகுதியில் காணாமல் போன தனது கணவன் நவ்ஷாதை பார்த்ததாக போலீசாரிடம் கூறியுள்ளார்.மேலும் கணவனை பார்த்ததாக கூறிவிட்டு ஏன் அவரை வீட்டுக்கு அழைத்து வரவில்லை என்ற சந்தேகம் போலீசாருக்கு எழுந்துள்ளது.

மேலும் அப்சானா கூறியதை வைத்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் போலீசார் ஆராய்ந்து உள்ளனர்.அதில் எதிலும் நவ்ஷாத் இல்லை - இதை அடுத்து போலீசாருக்கு அப்சானா மீது சந்தேகம் எழுந்துள்ளது.இதனால் காவல் நிலையம் அழைத்து வந்து அப்சானாவிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.விசாரணையின் ஒரு கட்டத்திற்கு பிற்பாடு கணவனை கொன்று புதைத்ததாக அப்சானா வாக்கு மூலம் அளித்தார்.

கொன்றதாக வாக்குமூலம் அளித்துவிட்டு உடலை வீட்டுக்குள் புதைத்ததாகவும் - எரித்து சாம்பலை ஆற்றில் கலக்கியதாகவும் - மேலும் அருகிலுள்ள சர்ச் செமித்தேரியில் புதைத்ததாகவும் மாற்றி மாற்றி கூறியுள்ளார்.இதை அடுத்து கடந்த மூன்று நாட்களாக இவர்கள் தங்கிய வாடகை வீட்டிற்கு சென்ற போலீசார் அவர் கூறிய இடங்களில் முழுவதுமாக தோண்டி பார்த்தும் உடலின் பாகங்கள் எதுவும் போலீசாருக்கும் சிக்கவில்லை.அதுபோல அனைத்து காவல் நிலையங்களுக்கும் இவரது புகைப்படம் அனுப்பி இந்த நபரை குறித்து விசாரிக்கவும் உத்தரவிட்டுள்ளனர்.

போலீசாரும் நவ்ஷாத் கொலை செய்யப்பட்டுள்ளார் என உறுதியாக நம்பினர்  உடல் பாகங்கள் எதுவும் கிடைக்கவும் இல்லை என்பதால் செய்வதறியாது போலீசாரும் குழம்பி இருந்த நிலையில் - முக்கிய திருப்பமாக இறந்ததாக கூறப்படும் நவ்ஷாத் இன்று உயிருடன் இடுக்கி அருகே தொடுபுழாவில் போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்தது நவ்ஷாத் என்ற வாலிபர் கூறுகையில் மனைவி அப்சானாவுக்கு பயந்து தான் ஊரை விட்டு சென்றதாகவும், தன்னை தொடர்ந்து தாக்கி வந்ததாகவும் , அவரால் வரவழைக்கப்பட்ட சிலரும்  அடிக்கடி தாக்கியும் உள்ளதாகவும் உயிருக்கு பயந்து தான் வீட்டை விட்டு ஓடியதாக நவ்ஷாத் கூறியுள்ளார். மேலும் மனைவியிடம் செல்ல விருப்பமா என்று கேட்டதற்கு ஐயோ வேண்டாம் - என்றும் கூறியுள்ளார். தொடர்ந்து நடத்தப்பட்ட  விசாரணையில் ஒன்றரை வருடமாக கணவனை போலீசார் தேடியும் எந்த ஒரு விவரமும் கிடைக்கவில்லை - அதனால்தான் இப்படி ஒரு நாடகத்தை அரங்கேற்றியதாக அப்சானா கூறியதாக தெரிகிறது. மூன்று நாட்களாக கேரளாவில் மனைவி கொன்று புதைத்ததாக  பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இந்த சம்பவத்தின் முடிவில் மூன்று நாட்களுக்குப் பிறகு கணவன் உயிரோடு கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.

கணவனை கொன்றதாக மனைவி வாக்குமூலம் அளித்து மூன்று நாட்களாக உடலை தேடும் பணி தீவிரமாக நடந்து வந்த நிலையில் மனைவி அரங்கேற்றிய நாடகத்தால் இறந்ததாக கூறப்பட்ட வாலிபர் திடீரென உயிருடன் வந்த சம்பவம் கேரளா மக்களிடையே பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.இதற்கு என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேரள போலீசாரும் குழப்பத்திலும் உள்ளனர்.

இதையும் படிக்க    | வாரிசு இல்லாத ஆண் இறக்கும்பட்சத்தில் யாருக்கு வாரிசு சான்றிதழ்? அரசாணையில் திருத்தம் செய்ய உத்தரவு!