கணவரை கொலை செய்துவிட்டு தற்கொலை என நாடகமாடிய மனைவி...விசாரணையில் வெளிவந்த உண்மை...!!

சென்னை அரும்பாக்கத்தில் கணவர் கொலை செய்து விட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடிய மனைவியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

கணவரை கொலை செய்துவிட்டு தற்கொலை என நாடகமாடிய மனைவி...விசாரணையில் வெளிவந்த உண்மை...!!

சென்னை அரும்பாக்கம் ராதாகிருஷ்ணன் நகரைச் சேர்ந்தவர் ஆனந்த குமார். இவருக்கும் இவரின் குடும்பத்தில் உள்ளவர்களும் அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம்.  நேற்று இரவு ஆனந்த குமாருக்கும் இவரின் மனைவி தனலட்சுமிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தனலட்சுமி கையில் ரத்தக்காயத்துடன்  கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுருந்தார். தகவல் அறிந்து வந்த அரும்பாக்கம் போலீசார் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சென்று தனலட்சுமியிடம் விசாரணை நடத்தினர்.

இதையடுத்து இன்று காலை அரும்பாக்கம் போலீசார், தனலட்சுமி வீட்டிற்கு சென்று பார்த்த போது வீட்டின் கதவு வெளிப்புறமாக தாழ்ப்பாள் போடப்பட்டு பூட்டு  மாட்டப்பட்டிருந்த நிலையில் இருந்தது. சந்தேகமடைந்த போலீசார் பூட்டை உடைத்து பார்த்த போது கணவர் ஆனந்த குமார்  கேபிள் டிவி ஒயரால் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்தார். தலையில் ரத்தம் காயம் இருந்தது.

ஆனந்தகுமார் உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  அதன்பிறகு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தனலட்சுமியை காவல் நிலையத்திற்கு வரவழைத்து அரும்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தினர்.

முதலில் தற்கொலை என கூறிய அவர், பின்னர் கணவரை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். அதனைதொடர்ந்து அவரை கைது செய்த போலீசார், கொலைக்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.