கள்ளகாதலனுடன் சேர்ந்து கணவரை தீர்த்துக்கட்டிய மனைவி....

சேலத்தில் உல்லாச வாழ்க்கைக்காக கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவியே கணவரை தீர்த்துக்கட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளகாதலனுடன் சேர்ந்து கணவரை தீர்த்துக்கட்டிய மனைவி....

சேலம் அம்மாபேட்டை காவல் நிலையத்தின் பின்புறம் உள்ள மார்க்கெட் பகுதியில் வசித்து வரும் பிரபு என்பவர், அதே பகுதியில் வாழை இலை கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் தனது சொந்த அக்கா மகள் சாலினியை கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு ஒன்றரை வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. இந்தநிலையில் சம்பவதன்று நள்ளிரவு கணவர் பிரபு அவரது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். தகவலறிந்த வந்த அம்மாப்பேட்டை போலீசார், இச்சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டனர்.

அதில் பல திடுக்கிடும் தகவல் சிக்கியுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இதற்கிடையில் இச்சம்பவம் குறித்து போலீசார் பிரபுவின் மனைவி ஷாலினியிடம் விசாரணை செய்தனர். அதில் நள்ளிரவில்  வீட்டிற்குள் புகுந்த மர்மநபர்கள் தனது கழுத்தில் இருந்த நகையை பறித்துக்கொண்டு தனது கணவரை கொலை செய்துவிட்டு தப்பி சென்றுவிட்டதாக தெரிவித்துள்ளார்.

ஆனால் அவர்கள் வசித்த இரண்டாம் தளத்தில் கொள்ளை சம்பவம் நடந்ததற்கான எவ்வித தடயங்களும் சிக்கவில்லை என்பதால் போலீசாருக்கு சந்தேகம் எழ தொடங்கியது. என்ன நடந்தது என்பதை கண்டுபிடித்தாக வேண்டும் என்ற முயற்சியில் இறங்கிய போலீசார்,  ஷாலினியிடம்  கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்துள்ளார். அதில் ஷாலினி சமூக வலைத்தளங்கள் மூலம் பல்வேறு ஆண் நபர்களுடன் பழகி வந்ததாகவும், இதனால் அவருக்கும் கணவர் பிரபுவுக்கும் இடையே அவ்வப்போது தகராறு இருந்து வந்ததாகவும் போலீசாரிடம் தெரிவித்துள்ளார் ஷாலினி. அதன்பேரில் ஷாலினியின் சமூகவலைத்தள பக்கங்களை போலீசார் ஆய்வு செய்தனர்.

அதில்  திருச்சி மாவட்டம் துறையூரை சேர்ந்த அப்பு என்கிற காமராஜ் என்பவருடன் ஷாலினி நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சிக்கியுள்ளது. இந்த புகைப்படம் குறித்து ஷாலினியிடம் போலீசார் துருவி துருவி விசாரித்தனர். அதில் ஷாலினி கூறிய திடுக்கிடும் தகவல்களை கேட்டு போலீசார் அதிர்ச்சியுற்றனர். ஆம் ஷாலினிக்கும் காமராஜுக்கும் இடையே கடந்த 1 ஆண்டுகளாக கள்ளத் தொடர்பு இருந்ததும், அவ்வபோது நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தாய் வீட்டிற்கு செல்வதாக கூறிவிட்டு கள்ளக்காதலனுடன் தனிமையில் உல்லாசமாக இருந்து வந்ததாகவும் ஷாலினி தெரிவித்துள்ளார். 

தொடர்ந்து தனது உல்லாச வாழ்க்கைக்கு கணவர் பிரபு இடையூறாக இருப்பதால் அவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்து சம்பவத்தன்று கள்ளக்காதலனுடன் இணைந்து கணவரை தூக்கத்திலேயே தீர்த்து கட்டியதாக ஷாலினி ஒப்புக்கொண்டார். இதையடுத்து துறையூர் விரைந்த அம்மாபேட்டை போலீசார் ஷாலினியின் கள்ளக்காதலனை கைது செய்து சேலம் அழைத்து வந்தனர். பின்னர் இருவரையும் கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.