பெட்டியோடு போலீசிடம் வந்த பெண்..! காவலர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி...! நடந்தது என்ன...?

பெட்டியோடு போலீசிடம் வந்த பெண்..!  காவலர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி...! நடந்தது என்ன...?

ஓயாமல் சண்டையிட்டு வந்ததால் பெற்ற தாய் என்றும் பாராமல் மகளே கொலை செய்து தாயின் சடலத்தை சூட்கேசில் வைத்து, அத்துடன் தந்தையின் புகைப்படத்தையும் வைத்து காவல் நிலையத்திற்கு எடுத்து வந்துள்ள கொடூர சம்பவம் கர்நாடக தலைநகர் பெங்களூருவில் அரங்கேறியுள்ளது.

பெங்களூரு மைக்கோ லேஅவுட் காவல் நிலையத்திற்கு நள்ளிரவில் பெண் ஒருவர் சூட்கேசுடன் வந்தார். காவல் நிலையத்தில் இருந்த போலீசாரம் ஏதோ புகார் அளிக்க தான் அந்தப் பெண் வருகிறார் என நினைத்து என்ன பிரச்சனை என அப்பெண்ணிடம் கேட்டபோது அந்தப் பெண் பதில் ஏதும் பேசாமல் தான் கையில் வைத்திருந்த சூட்கேஸை திறந்து போலீசாருக்கு காட்டினார். சூட்கேசின் உள்ளே  70 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் சடலம் மற்றும்  அத்துடன் ஒரு ஆணின் புகைப்படமும் இருந்ததை பார்த்து போலீசார் அதிர்ந்து போனார்கள்.

இதைத் தொடர்ந்து, அந்த பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் அந்தப் பெண் பிலேகஹல்லி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் செலிமா சென் என்றும்,  சூட்கேஸில் இருந்த சடலம் தனது தாய் என்றும் கூறினார்.  

செலிமா சென் தனது 70 வயது தாய் மற்றும் அத்தையுடன் வசித்து வந்துள்ளார். அடிக்கடி செலிமா சென்னின் தாய்க்கும் அத்தைக்கும் இடையே சண்டை நடந்து வந்ததாகவும், இதன் காரணமாக தனது தாய் தற்கொலை செய்து கொள்ள போவதாக தன்னை தொடர்ந்து மிரட்டி வந்ததாகவும் இதனால் தான் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளானதாகவும் கூறினார். 

இவ்வாறிருக்க, நேற்று வழக்கம் போல தாய்க்கும் அத்தைக்கும் இடையே சண்டை வந்ததால் தன்னால் தாங்கிக் கொள்ள முடியாமல் 20 தூக்க மாத்திரைகளை தாய்க்கு கொடுத்துவிட்டு பின்னர் சேலையால் கழுத்தை இறுக்கி கொலை செய்ததாகவும், பின்னர் தாயின் சடலத்தை சூட்கேசில் வைத்து, மறைந்த தன் அப்பாவிடம் தாயின் ஆத்மா செல்ல வேண்டும் என நினைத்து தந்தையின் புகைப்படத்தையும் சடலத்துடன் சூட்கேஸில் வைத்து காவல் நிலையத்திற்கு கொண்டு வந்ததாக போலீசில் தெரிவித்தார்.

 இதைத்தொடர்ந்து, போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததுடன், செலிமா சென்னிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெற்ற தாயையே மகள் கொலை செய்து சூடேசியில் அடைத்து காவல் நிலையத்திற்கு எடுத்து வந்த கொடூர சம்பவம் பெங்களூரு நகரில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


இதையும் படிக்க     | போலீசிடம் கெத்து காட்ட நினைத்து வழக்குகளை வாங்கிய நபர்கள்!