தொழிலதிபர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறி தீக்குளித்த பெண்.. கடிதம் மற்றும் வீடியோ வெளியாகி பரபரப்பு!!

கோவையில் தொழிலதிபர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறி தீக்குளித்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததை அடுத்து கொலை வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொழிலதிபர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறி தீக்குளித்த பெண்.. கடிதம் மற்றும் வீடியோ வெளியாகி பரபரப்பு!!

கோவை ஆர்.எஸ் புரம் பகுதியை சேர்ந்த நவநீதன் ஈரோடு மாவட்டம் பவானியில் செராமிக்ஸ் மற்றும் சிமெண்ட் நிறுவனம் நடத்தி வருகிறார். இங்கு பணியாற்றி வந்த மலர் என்பவருக்கு நவநீதன் தொடர் பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். இதனை அறிந்ததால்  நவநீதனுக்கும் அவரது மனைவி அனிலாவுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

தொடர் பாலியல் தொல்லையை தாக்கு பிடிக்க முடியாத மலர், காவல் நிலையத்தில் புகார் கொடுக்க போவதாக கூறியதை அறிந்து கணவன் மனைவி இருவரும் அப்பெண்ணை கொலை செய்து விடுவோம் என மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த மலர், கடந்த 30 ஆம் தேதி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். உடலில்  50 சதவீதத்திற்கும் மேல் தீக்காயம் ஏற்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த அவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த நிலையில்  உரிமையாளர் நவநீதன் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், தனது மரணத்திற்கு நவநீதன், அவரது மனைவி அகிலா மற்றும் உறவினர்கள் உள்ளிட்ட 4 பேரே காரணம் எனவும் அவர் பேசும் வீடியோ வெளியாகியுள்ளது.

இதைத்தொடர்ந்து அவர் எழுதிய கடிதம் மற்றும் வீடியோ பதிவுகளை கைப்பற்றிய போலீசார், கொலை வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள நவநீதன் மற்றும் அகிலாவை தேடி வருகின்றனர்.