தடைசெய்யப்பட்ட லாட்டரி,குட்கா மற்றும் புதுச்சேரி சாராயம் விற்ற பெண்...!!

தடைசெய்யப்பட்ட லாட்டரி,குட்கா மற்றும் புதுச்சேரி சாராயம் விற்ற பெண்...!!

சீர்காழி அருகே தடைசெய்யப்பட்ட லாட்டரி,குட்கா மற்றும் புதுச்சேரி சாராயம் விற்ற பெண் உள்பட மூன்று பேரை கைது செய்து சீர்காழி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி  திருவள்ளூர் நகர் தென்பாதியைச் சேர்ந்த கணேசன் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளார்.  சீர்காழி காவல் ஆய்வாளருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் கணேசனை கைது செய்து காவல் நிலையத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  இதேபோல் தொடுவாய் பகுதியை சேர்ந்த சின்னதம்பி என்பவர் தனது கடையில் தடைசெய்யப்பட்ட ஹான்ஸ் மற்றும் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்துள்ளார்.

இதனை அடுத்து அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் கோவில்பத்து பகுதியில் புதுச்சேரி சாராயம் 110 லிட்டர் விற்பனைக்காக பதுக்கி வைத்த வள்ளிமயில் என்பவரையும் கைது செய்தனர்.  கைது செய்யப்பட்ட பெண் உட்பட மூன்று பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சீர்காழி போலீசார் சிறையில் அடைத்தனர்.

இதையும் படிக்க:  கார்ஃபைட் மூலம் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள்.... எச்சரிக்கை விடுத்த அதிகாரிகள்!!