ஐ எம் ஆல் சோ டாக்டர்... பெண் மருத்துவரை காலணியால் தாக்கிய இளைஞர்!!

ஐ எம் ஆல் சோ டாக்டர்... பெண் மருத்துவரை காலணியால் தாக்கிய இளைஞர்!!

அரியலூரில் பெண் மருத்துவரை செருப்பால் அடித்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். 

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள குமிழியம் வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தில் அரியலூரைச் சேர்ந்த  சத்யா மருத்துவராக பணியாற்றி வருகிறார்.  இந்நிலையில் மருத்துவர் சத்யாவின் கணவர் சிலம்பரசனும் கூடவே மருத்துவமனைக்கு வருவதும் அவருடன் இருப்பதையும் வழக்கமாக கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. 

அப்போது அதே பகுதியை சேர்ந்த சுரேஷ்  தனது சகோதரியின் குழந்தையை சிகிச்சைக்காக அழைத்து வந்துள்ளார். அங்கு சிறுவனுக்கு மருத்துவம் பார்க்கப்பட்ட நிலையில் ஊசி போடுவதற்காக சிறுவனை பிடிக்க சொல்லி சத்யா சுரேஷிடம் கூறியுள்ளார்.  ஆனால் சுரேஷோ பிடிக்க முடியாது என்றும் சத்யாவின் கணவரை பிடிக்க சொல்லி தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார்.  இதனால் இருவருக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில் சுரேஷ் செருப்பால் மருத்துவரையும் அவரது கணவரையும் அடிக்க முயன்றதாக கூறப்படுகிறது.  

இதனையடுத்து பெண் மருத்துவர் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த இரும்பிலிகுறிச்சி போலீசார் சுரேஷை விசாரணைக்காக அழைத்து சென்றனர். 

இதையும் படிக்க:    விளையாட்டை மையப்படுத்திய உதகை 200 மலர்க் கண்காட்சி...!!