சிறுமியை ஏமாற்றி உயிரை எடுத்த இளைஞர்....!!!

சிறுமியை ஏமாற்றி உயிரை எடுத்த இளைஞர்....!!!

17 வயது சிறுமியை கர்ப்பிணியாக்கிய இளைஞர் ஒருவர், அவரை கொலை செய்து மண்ணுக்குள் புதைத்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் கஞ்சனூர் அருகே உள்ள சாலவனூர் கிராமத்தில் மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் ஏரிக்கரை பகுதியில் பணி நடந்து வந்தது. அப்போது வாய்க்காலை ஆழப்படுத்துவதற்கு பள்ளம் தோண்டிய தொழிலாளர்களுக்கு அங்கு நேர்ந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

ஏரிக்கரை மண்ணுக்கு அடியில் பெண்ணின் உடல் புதைக்கப்பட்டு அதில் இருந்து கைகள் மட்டும் வெளியே தெரிந்ததால் அதிர்ந்து போயினர்.  இதைத் தொடர்ந்து விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா, செஞ்சி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் கவினா ஆகியோர் தலைமையிலான போலீசார் விசாரணையில் இறங்கியபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. 

விழுப்புரம் மாவட்டம் கண்டமானடியைச் சேர்ந்த 17 வயது மாணவி பிரியதர்ஷினி.  ப்ளஸ் 1 மாணவியான இவர் விக்கிரவாண்டியை அடுத்த சித்தேரிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த டிரம்ஸ் கலைஞர் அகிலன் என்பவரை காதலித்து வந்துள்ளார்.  மேலும் கப்பூரில் உள்ள உறவினர் வீட்டின் அருகே காதலனுடன் சென்ற பிரியதர்ஷினியை பெற்றோர் அடித்து உதைத்துள்ளனர்.  இதையடுத்து 3 மாதம் கர்ப்பமான பிரியதர்ஷினி, தன் ஆசைக் காதலனிடம் திருமணம் செய்து கொள்ளுமாறு கெஞ்சியதாக தெரிகிறது.  இதனால் ஆத்திரமடைந்த அகிலன், பிரியதர்ஷினியை அடித்துக் கொன்றதோடு ஏரிக்கரை மணலிலேயே புதைத்து விட்டு தப்பியோடினார். 

இதையும் படிக்க:   தகாத உறவால் பறிப்போன உயிர்...!!