காதலிக்க வற்புறுத்தி சிறுமியின் வாயில் விஷத்தை ஊற்றிய கொடூரன்!!ஒருதலைக் காதலால் நேர்ந்த விபரீதம்...

காதலிக்க மறுத்த சிறுமியின் வாயில் விஷத்தை ஊற்றிய வாலிபர் தனது கையை கத்தியால் அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காதலிக்க வற்புறுத்தி சிறுமியின் வாயில் விஷத்தை ஊற்றிய  கொடூரன்!!ஒருதலைக் காதலால் நேர்ந்த விபரீதம்...

தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூர் அருகே உள்ள செவல்குளம் கிராமத்தை சேர்ந்தவர் வேல்முருகன். இவர் அதே பகுதியைச் சேர்ந்த 11-ம் வகுப்பு படிக்கும் சிறுமியை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து வேல்முருகன் தன் காதலை தெரிவித்த போதும் அந்த சிறுமி மறுத்ததாக தெரிகிறது.

இந்நிலையில், சம்பவத்தன்று சிறுமியின் வீட்டிற்கு சென்ற வேல்முருகன், அங்கிருந்த சிறுமியிடம் தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால், அந்த சிறுமி அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த வேல்முருகன், சிறுமியை தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்ததோடு, தான் மறைத்து வைத்து இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்து சிறுமியின் வாயில் ஊற்றியதாக கூறப்படுகிறது.

பின்னர் அவள் இல்லாத உலகத்தில் நானும் இருக்க போவதில்லை என்று கூறி தானும் மீதம் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து, கத்தியால் தனது இடது கையில் அறுத்துக் கொண்டதாக தெரிகிறது. இதில் 2 பேரும் அடுத்தடுத்து மயங்கி கீழே விழுந்தனர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் 2 பேரையும் உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து சிறுமியின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும், காதலிக்க மறுத்த சிறுமியின் வாயில் விஷத்தை ஊற்றிய வாலிபர் தானும் கையை கத்தியால் அறுத்துக் கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.