முன்னாள் காதலியின் கணவரை தாக்கிய இளைஞர்...!

புதுச்சேரியில் திருமணமான முன்னாள் காதலியின் கணவரை, வீடு புகுந்து தாக்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது.

லிங்காரெட்டிபாளையம் பகுதியை சேர்ந்த தர்மராஜ் என்பவரை, கடந்த 21-ம் தேதி மர்ம கும்பல் ஒன்று ஆயுதங்களால் தாக்கியுள்ளது. சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் அந்த கும்பலை பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

விசாரணையில், கிருஷ்ணா நகரை சேர்ந்த தினேஷ் மற்றும் தர்மராஜின் மனைவி பிரித்தியாவதி இருவரும் காதலித்து வந்த நிலையில், கருத்து வேறுபாட்டால் பிரிந்துள்ளனர். கடந்த மாதம் பிரித்தியாவதிக்கும், தர்மராஜூக்கும் திருமணம் நடந்ததால் ஆத்திரமடைந்த தினேஷ், தனது நண்பர்களுடன் சேர்ந்து இந்த தாக்குதலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இந்த நிலையில் தப்பியோடிய தினேஷை போலீசார் தேடி வருகின்றனர்.