போதை பொருட்கள் விற்பனை செய்த இளைஞர்..! கைது செய்த அதிகாரிகள்...!

போதை பொருட்கள் விற்பனை செய்த இளைஞர்..! கைது செய்த அதிகாரிகள்...!

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் உயர் ரக போதை பொருட்களுடன் கஞ்சா விற்பனை நடந்து வந்துள்ளது.

போதைப் பொருட்களின் பயன்பாட்டையும், நடமாட்டத்தையும் முற்றிலும் ஒழித்து, போதை பொருள்  இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு மாவட்ட காவல் துறை தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் அடிப்படையில் கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் மதுவிலக்கு அமலாக்க காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கோவிந்த நாயக்கன்பாளையம் பேருந்து நிலையத்தில் சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த நபரை விசாரணை செய்தபோது அவரிடம் உயர் ரக போதைப் பொருளான மெட்டாபெத்தமைன் மற்றும் கஞ்சா பொட்டாலங்கள் இருப்பது தெரிய வந்தது. 

அந்த விசாரணையில், கொண்டையம் பாளையத்தை சேர்ந்த விக்னேஷ்(26) என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவரை கைது செய்த காவல்துறையினர் அவர் விற்பனைக்கு வைத்திருந்த 5. 25 கிராம் எடையுள்ள மெத்தபெட்டமைன் மற்றும் 1/2 கிலோ எடையுள்ள கஞ்சாவை பறிமுதல் செய்து  நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.

இதையும் படிக்க : தமிழ் கட்டாய பாடச் சட்டம்..! தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு..!