குழந்தைக்கு விஷம்...தாய், தந்தை தற்கொலை...ஒரே குடும்பத்தில் பிரிந்த 3 உயிர்!

குழந்தைக்கு விஷம்...தாய், தந்தை தற்கொலை...ஒரே குடும்பத்தில் பிரிந்த 3 உயிர்!

திருவள்ளூர் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் திருமேனிகுப்பம் அருகே உள்ள வசனம்பட்டு கிராமத்தில் கலையரசன் என்பவர், தனது மனைவி நித்தியா மற்றும் குழந்தை ஹேம்நாத்துடன் வாழ்ந்து வந்துள்ளார். கேட்டரி வேலை செய்து வந்த கலையரசன், அத்தொழிலில் போதிய வருமானம் இல்லாததால் குடும்பத்துடன் வறுமையில் வாழ்ந்து வந்துள்ளார். அதுமட்டுமல்லாமல், குடும்பத்தில் கடன் பிரச்சனையும் அதிகரித்து மிகுந்த அவதிக்குள்ளாகியதாக கூறப்படுகிறது.

இதையும் படிக்க : காங்கிரஸ் வேட்பாளரை தகுதி நீக்க வேண்டும்...நாதக வேட்பாளர் மேனகா வலியுறுத்தல்!

இதன் காரணமாக, தற்கொலை செய்துக்கொள்ளலாம் என்று முடிவு எடுத்த கலையரசன், முதலில் தனது குழந்தை ஹேம்நாத்துக்கு விஷம் கொடுத்து கொலை செய்து விட்டு, பின்னர் தனது மனைவியுடன் கலையரசனும், மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 

இது குறித்து தகவலறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மூவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன்பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக, வழக்குப்பதிவு செய்த போலீசார், இந்த தற்கொலை குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.