குடி போதையினால் ஏற்பட்ட விபரீதம்... வேலையின்போது ஏற்பட்ட தகராறில் ஒருவர் கொலை...

சிங்கம்புணரி அருகே குடிபோதையில் வேலி அமைக்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவர்களிடையே தகராறு.  ஒருவர் குத்திக்கொலை செய்யப்பட்டார்.

குடி போதையினால் ஏற்பட்ட விபரீதம்... வேலையின்போது ஏற்பட்ட தகராறில் ஒருவர் கொலை...

சிவகங்கை மாவட்டம் சதுர்வேதமங்கலம் சிவன்கோவில்பட்டியைச் சேர்ந்தவர் மருதுபாண்டியன் 46.  இவர் தனது உறவினர் லோகநாதன், செல்வசேகரன் உடன் மூவரும் சேர்ந்து லோகநாதன் எனக்குச் சொந்தமான இடத்தில் இன்று வேலி அடைக்கும் பணியை செய்து வந்துள்ளனர். இதில் மருது பாண்டியன் மர்மமான முறையில் குடல் சரிந்து இறந்து கிடந்தார்.

தகவல் அறிந்து வந்த சதுர்வேதமங்கலம் போலீசார் உடலை கைப்பற்றி சிங்கம்புணரி அரசு மருத்துவமனைக்கு பிணக்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர். மர்மமான முறையில் இறந்துகிடந்த மருதுபாண்டியன் இறந்ததற்கான காரணம் என்ன என்று லோகநாதன் மற்றும் செல்வசேகரன் இடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.  

குடிபோதையில் இந்த சம்பவம் நடந்ததாக தெரியவருகிறது. வேலைக்குச் சென்ற இடத்தில் மருதுபாண்டியன் இருந்ததால் அவர்கள் குடும்பத்தினர் சோகத்தில் உள்ளனர். சதுர்வேதமங்களம் போலீசார் மருதுபாண்டியன் கொலைக்கான காரணம் என்ன என்று விசாரித்துவருகின்றனர்.

இந்த வாரத்தில் இந்த பகுதியில் குடியினால் ஏற்பட்ட கொலை சம்பவம் இரண்டாவது சம்பவம் ஆகும். இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். குடி குடியை கெடுக்கும் என்பதற்கு இது ஒரு சான்றாக அமைந்து விட்டது.