வேறொருவரின் மனைவியுடன் தகாத உறவு வைத்திருந்த காவல் ஆய்வாளர் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம்!    

செங்கல்பட்டில், வேறொரு நபரின் மனைவியுடன் தகாத உறவு வைத்திருந்த காவல் ஆய்வாளர், ஆபாச வீடியோவில் சிக்கியதால் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

வேறொருவரின் மனைவியுடன் தகாத உறவு வைத்திருந்த காவல் ஆய்வாளர் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம்!      

செங்கல்பட்டில், வேறொரு நபரின் மனைவியுடன் தகாத உறவு வைத்திருந்த காவல் ஆய்வாளர், ஆபாச வீடியோவில் சிக்கியதால் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை வீரா குட்டி தெருவை சேர்ந்த அஷ்ரப் அன்சாரி என்பவருக்குத் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு அஷ்ரப் அன்சாரி அவரது மனைவியின் செல்போனை பரிசோதித்தபோது அவர் வேறு ஒருவருடன் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அஷ்ரப் அன்சாரி அவரது மனைவியை கண்டித்துள்ளார்.

மேலும் செல்போனில் மற்றொருபுறம் பேசி வரும் நபர் குறித்தும் விசாரணை நடத்தி வந்தார். இந்நிலையில் அஷ்ரப் அன்சாரியின் மனைவியுடன் கள்ளத்தொடர்பு இருந்தது செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் முனிசேகர் என்பது தெரியவந்தது. தொடர்ந்து மனைவியின் செல்போனில் இருந்த காவல் ஆய்வாளர் முனிசேகரின் அந்தரங்க புகைப்படங்களை சேகரித்த கணவர் அஷ்ரப் தமிழ்நாடு காவல்துறை தலைவரிடம் புகார் மனு அளித்தார். இதனைத் தொடர்ந்து காவல் ஆய்வாளர் முனிசேகர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.