இருசக்கர வாகனம் மீது லாரி மோதி ஒருவர் பலி...

அருப்புக்கோட்டை அருகே இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதி விபத்தில் கணவன் கண் முன்னே மனைவி உயிரிழந்தார்.

இருசக்கர வாகனம் மீது லாரி மோதி ஒருவர் பலி...

விருதுநகர் |  அருப்புக்கோட்டையில் இருந்து விருதுநகரை நோக்கி ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த கட்டிட தொழிலாளியான ராஜா - மாரியம்மாள் தம்பதியர் இருவரும் அருப்புக்கோட்டையில் உள்ள ஒரு துக்க நிகழ்ச்சிக்கு வந்துவிட்டு  ஸ்ரீவில்லிபுத்தூருக்கு திரும்பினர்.

அப்போது அருப்புக்கோட்டை அருகே புளியம்பட்டி தனியார் இருசக்கர வாகன ஷோரூம் அருகே அரிசி ஏற்றிக்கொண்டு சென்ற லாரியை முந்தி சென்ற போது எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதி நிலை தடுமாறி இருசக்கர வாகனத்தில் சென்ற மாரியம்மாள் சாலையில் நடுவே விழுந்துள்ளார்.

அவர் மீது பின்னே வந்த லாரி சக்கரம் ஏறி இறங்கியதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும் படிக்க | தியேட்டரில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் ரூ.40 லட்சம் பொருட்கள் சேதம்...

எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த விருதுநகர் தனியார் கல்லூரி பேராசிரியை மற்றும் இறந்த மாரியம்மாளின் கணவர் ராஜா ஆகியோரும் தலையில் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனை சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

மேலும் உடலை சம்பவ இடத்திலிருந்து அமரர் ஊர்தி மூலம் மீட்டு அருப்புக்கோட்டை தாலுகா காவல் நிலைய போலீஸ் சார் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

துக்க நிகழ்ச்சிக்காக வந்து வீடு திரும்பிய போது கணவன் கண் முன்னே மனைவி லாரி சக்கரம் ஏறி உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மற்றும் அப்பகுதி மட்டுமே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க | தனியார் சுற்றுலாப் பேருந்து கவிழ்ந்த விபத்தில் மாணவி ஒருவர் உயிரிழப்பு..!