வங்கியில் கள்ள நோட்டுகள் செலுத்திய இருவா் கைது...!

வங்கியில் கள்ள நோட்டுகள் செலுத்திய இருவா் கைது...!

சிதம்பரம் அருகே வங்கியில் கள்ள நோட்டுகளை செலுத்திய இருவரை போலீசாா் கைது செய்துள்ளனா்.

கடலூா் மாவட்டம் தேவனாம்பட்டினத்தை சோ்ந்த சுதாகா் மற்றும் ரெட்டிபாளையத்தை சோ்ந்த செல்வகுமாா் ஆகியோா் முடசல் ஓடை கிராமத்தில் உள்ள அரசு மீன் வளர்ச்சி கழக டீசல் விற்பனை நிலையத்தில் பணியாற்றி வருகின்றனா். 

இதையும் படிக்க : கர்நாடகா: பாஜகவின் முதல் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு... முதலமைச்சர் பசவராஜ் பொம்மை போட்டியிடும் தொகுதி என்ன?

இந்நிலையில் இருவரும் டீசல் விற்பனை செய்த பணம் 6 லட்சத்து 4 ஆயிரம் ரூபாயை வங்கியில் செலுத்தியுள்ளனர். அப்போது அதில் ஏராளமான 500 ரூபாய் கள்ள நோட்டுகள் இருந்துள்ளன. பின்னர் இதுகுறித்து தகவலறிந்த போலீசாா் அவர்கள் இருவரிடமும் விசாரணை செய்து கைது செய்துள்ளனா். இதற்கிடையில், மேலும் 52 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான கள்ள நோட்டுகளை அவர்களிடம் பறிமுதல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.