இளைஞர் ஒருவரை ஓட, ஓட விரட்டி கொடூரமாக வெட்டிக்கொலை செய்த கும்பல்!!

இளைஞர் ஒருவரை ஓட, ஓட விரட்டி கொடூரமாக வெட்டிக்கொலை செய்த கும்பல்!!

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே பெண் கொடுப்பதை தடுத்து நிறுத்திய இளைஞரை, இரண்டு பேர் ஓட ஓட விரட்டி மிக கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

வத்தலக்குண்டு மலையப்பன் பட்டி கிராமத்தை சேர்ந்த சாமிதுரை என்ற இளைஞர், வத்தலகுண்டு - உசிலம்பட்டி பிரிவில் உள்ள பேக்கரி ஒன்றில் டீ குடித்து விட்டு ,பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு திடீரென அரிவாளுடன் வந்த இரண்டு பேர் சாமி துரையை சரமாரியாக வெட்ட தொடங்கினர். அவர்களிடமிருந்து தப்பியோட முயன்ற சாமித்துரையை ஓட ஓட துரத்திச் சென்று நடுரோட்டிலேயே மிக கொடூரமாக அரிவாளால் தலையில் வெட்டினர். இதில் பலத்த காயமடைந்த அவர் நிகழ்விடத்திலேயே நிலைக்குலைந்து ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார்.  

பட்டப்பகலில் இந்த சம்பவத்தை  பார்த்த அப்பகுதியில் இருந்தவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அரிவாளுடன் சுற்றி திரிந்த மருது,உதயகுமார் ஆகிய இரண்டு  பேரை கைது செய்தனர். அத்துடன்  சாமித்துரையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனிடையே  கொலை சம்பவம் குறித்த போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் மருது என்பவருக்கு பெண் கொடுப்பதை தடுத்து நிறுத்த சாமிதுரை முயற்சி செய்ததால், அவரை வெட்டி கொலை செய்ததாக கொலையாளிகள் வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.