ஒரே மரத்தில் இரண்டு பேர் தூக்கிட்டு தற்கொலை..போலீசார் தீவிர விசாரணை

சங்கராபுரம் அருகே ஒரே மரத்தில் இரண்டு பேர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒரே மரத்தில் இரண்டு பேர் தூக்கிட்டு தற்கொலை..போலீசார் தீவிர விசாரணை

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபும் அடுத்த மேல்சிறுவள்ளூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் கார்த்திக் மற்றும் தணிகாசலம். இவர்கள் இருவரும் ஒரே மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைகாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து கொலையா அல்லது தற்கொலையா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.