ப்ளாக் எடுக்க அழைத்துச் சென்று கூட்டு பலாத்காரம் செய்த கொடூரம்; வீடியோ எடுத்து மிரட்டியதால் பரபரப்பு!

பாகிஸ்தானின் பஞ்சாபில் ஒரு அமெரிக்கா பெண்ணை ஹோட்டலுக்கு அழைத்து சென்று கூட்டு பலாத்காரம் செய்து வீடியோ எடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ப்ளாக் எடுக்க அழைத்துச் சென்று கூட்டு பலாத்காரம் செய்த கொடூரம்; வீடியோ எடுத்து மிரட்டியதால் பரபரப்பு!

இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர், இந்த சம்பவம் போர்ட் DG கான் மாவட்டத்தில் மான்ரோய் மலை பகுதியில் தான் நடந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த பகுதி லாகூரில் இருந்து 500 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. முஸாமில் சிப்ரா மற்றும் அஸான் கோஸா என்ற இருவரும் வீடியோ ப்ளாக் எடுக்கலாம் என அந்த பாதிக்கப்பட்டப் பெண்ணை அழைத்துள்ளனர். அந்த பெண்ணும் ஒரு வீடியோ பிளாக்கர் (Blogger) மற்றும் ஒரு பேஸ்புக் பக்கத்தையும் நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இது குறித்து DG கான் மாவட்டத்தின் துணை ஆணையர் அன்வர் பர்யார் கூறுகையில், முஸாமில் சிப்ரா மற்றும் அஸான் கோஸா அழைத்ததன் பேரில் அந்த அமெரிக்க பெண் போர்ட் மோன்ரோய் பகுதிக்கு சென்றுள்ளார் எனத் தெரிவித்தார். கடந்த ஞாயிறன்று, லாகோருக்கு வந்த பிறகு, அந்த பெண் முஸாமில் சிப்ரா வீட்டிற்கு சென்றிருக்கிறார். 21 வயதான அந்த பெண் பாகிஸ்தானில் கடந்த 7 மாதங்களாக சுற்றுலா விசாவில் வசித்து வந்துள்ளார். அந்த பெண் போர்ட் மோன்ரோய் பகுதிக்கு வீடியோ ப்லோக் எடுக்க சிப்ரா மற்றும் அசான் உடன் சென்றுள்ளார் என ஒரு செய்தி நிறுவனமும் தெரிவித்துள்ளது.  

அப்போது சந்தேகத்திற்குரிய நபர்கள், அந்த பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து மிரட்டி உள்ளனர். இதுககுறித்து அந்த பெண் கூறுகையில், " நாங்கள் போர்ட் மோன்ரோயில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கியிருந்தோம், அங்கு சந்தேகதிற்குரிய நபர்கள் இருவரும் என்னைக் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்தார்கள், மேலும் என்னை மிரட்டுவதற்காக அதனை  வீடியோவும் எடுத்தனர்." என கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து எல்லை ராணுவ போலீசார் சிப்ரா மற்றும் அஸானை கைது செய்தனர். மேலும், அந்த பெண்ணுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதாக காவல் துறையினர் தெரிவித்தனர். இதுகுறித்து பாகிஸ்தான் பஞ்சாபின் முதலமைச்சர் ஹம்சா ஷெபாஸ் கூறுகையில், இந்த வழக்கை தனிப்பட்ட முறையில் கண்காணிக்க பஞ்சாப் மாகாண உயர் காவல் அதிகாரிக்கு அவர் உத்தரவிட்டார்.