முட்டி போட்டு திருட முயற்சி! பதற வைக்கும் சிசிடிவி காட்சி வெளியீடு!!!

உளுந்தூர்பேட்டையில் நள்ளிரவில் வீடு புகுந்து செல்போன், பணத்தை மர்ம நபர் திருடி சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

முட்டி போட்டு திருட முயற்சி! பதற வைக்கும் சிசிடிவி காட்சி வெளியீடு!!!

கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை அன்னை சத்யா தெரு பகுதியில் வசித்து வருபவர் முருகன் மகன் ரங்கநாதன்(43).

நேற்று நள்ளிரவு நேரத்தில் இவரது வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர் ஒருவர் வீட்டில் இருந்த ரூ.20 ஆயிரம் மதிப்பிலான இரண்டு செல்போன்கள், மற்றும் ரூபாய் 10 ஆயிரம் பணத்தை திருடிக் கொண்டு தப்பிச் சென்றுள்ளார்.

இதனை அறிந்து இன்று காலை பக்கத்து வீட்டில் வசித்து வரும் வழக்கறிஞர் ஆனந்த் என்பவர் வீட்டு சிசிடிவி கண்காணிப்பு கேமரா பதிவுகளை பார்த்த போது ரங்கநாதன் வீட்டில் திருடிய அந்த நபர் ஆனந்த் வீட்டின் மாடியில் முட்டி போட்ட படி சென்று திருட முயற்சி செய்த காட்சிகள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த மர்ம நபர் குறித்து உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.