41 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் திருட்டு! பூனே நகைக்கடையில் நடந்த பயங்கரம்!

டயர் கடையின் சுவற்றில் துளையிட்டு, அருகில் இருந்த நகைக்கடையில் இருந்து 41 லட்சம் மதிப்பிலான தங்க நகைகளைத் திருடியதால், தானேவில் பதற்றம் நிலவியுள்ளது.

41 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் திருட்டு! பூனே நகைக்கடையில் நடந்த பயங்கரம்!

மகாராஷ்டிர மாநிலம் தானே நகரில் அடையாளம் தெரியாத நபர்கள் நகைக் கடைக்குள் புகுந்து ரூ.41 லட்சம் மதிப்புள்ள பொருட்களைக் கொள்ளையடித்துச் சென்றதாக போலீஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளுக்கு இடைப்பட்ட இரவில் நடந்தது என்றும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் நகரின் வர்த்தகப் பகுதியில் இருந்த டயர் கடையின் சுவரை சேதப்படுத்திவிட்டு, அதற்கு அடுத்ததாக அமைந்துள்ள நகைக் கடைக்குள் நுழைந்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அந்த கடையில் இருந்த 41 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 652 கிராம் தங்கம் மற்றும் 40 கிலோ வெள்ளியை கொள்ளையடித்துள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன்.

கடை உரிமையாளர் அளித்த புகாரின் அடிப்படையில், வீடு அத்துமீறலுக்காக இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 457 மற்றும் திருட்டுக்காக 380 ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

அடையாளம் தெரியாத அந்த நபர்களை போலீசார் தேடி வருவதாகத் தெரிவித்துள்ள நிலையில், சொந்த கடையைத் தாண்டி, பக்கத்துக் கடை மூலமெல்லாம் திருட்டு நடப்பதால், அனைவருக்கும் பதற்றம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.