கூலி தொழிலாளி அடித்து கொலை: ஒருவர் கைது!

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே கூலி தொழிலாளி அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கூலி தொழிலாளி அடித்து கொலை:   ஒருவர் கைது!

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே கூலி தொழிலாளி அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டம் மேலநீலிதநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் சின்னமகாராஜன். இவர் கூலி தொழில் செய்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த பால் வியாபாரி மகாராஜன் என்பவர் இருசக்கர வாகனத்தில் வந்த  சின்னமகாராஜனை வழி மறித்து வாக்கு வாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதில் இருவருக்கும் மோதல் முற்றிய நிலையில், மகாராஜன் அவரது கூட்டாளிகளான ராமர் பாண்டியன் மற்றும் செல்ல பாண்டியன் ஆகியோருடன் சேர்ந்து சின்ன மகராஜனை தாக்கியுள்ளனர்.  இதில் படுகாயம் அடைந்த சின்னமகாராஜன் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் முக்கிய குற்றவாளியை கைது செய்த நிலையில் மேலும் இருவரை தேடி வருகின்றனர்.