சசிகலாவின் தொண்டர்களிடம் பிக்பாக்கெட்... திருடியவர்களுக்கு போலீஸ் வலைவீச்சு...

சசிகலா தொண்டர்களிடம் இருந்து 6 செல்போன் மற்றும் 45 ஆயிரம் பணத்தை பிக்பாக்கெட் அடித்த நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

சசிகலாவின் தொண்டர்களிடம் பிக்பாக்கெட்... திருடியவர்களுக்கு போலீஸ் வலைவீச்சு...

அதிமுக பொன்விழாவையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள முன்னாள் முதலமைச்சர்கள் பேரறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா நினைவிடங்களுக்கு சசிகலா தனது தொண்டர்களுடன் நேற்று காலை சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அப்போது சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் கூடியதால் கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம நபர்கள் சிலர் பிக்பாக்கெட்டில் ஈடுபட்டனர். குறிப்பாக சாந்தகுமார், பேச்சி முத்து, முனுசாமி உட்பட 6  தொண்டர்களிடம் இருந்து 6 செல்போன் மற்றும் ரமேஷ், பரத்குமார், பாபு ஆகியோரின் பர்ஸிலிருந்து சுமார் 45 ஆயிரம் ரூபாய் வரை பிக்பாக்கெட் அடித்துள்ளதாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அண்ணா சதுக்கம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.