மது போதையில் வாகனம் ஓட்டிய கணவர்...!! போலீசாரைத் தாக்கிய மனைவி கைது...!!

மது போதையில் வாகனம் ஓட்டிய கணவர்...!! போலீசாரைத் தாக்கிய மனைவி கைது...!!

வாகன சோதனையின் போது மது அருந்திவிட்டு போலீசாரிடம் மாட்டிக் கொண்ட கணவன், கணவரை காப்பாற்ற போலீசார் மீது தாக்குதல் நடத்திய மனைவி உட்பட மூன்று பேரை கைது செய்துள்ளனர்.

சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்தவர் சத்யராஜ் மற்றும் அவரது நண்பர் வினோத் குமார் ஆகிய இருவரும் நேற்று நள்ளிரவு ஒரு மணி அளவில் இருசக்கர வாகனத்தில் நெல்சன் மாணிக்கம் சாலை சந்திப்பு அருகே வந்துள்ளனர்.

அப்போது அப்பகுதியில் சூளைமேடு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். இருசக்கர வாகனத்தில் வந்த சத்யராஜ்  வினோத்குமார் ஆகிய இருவரும் மது அருந்திவிட்டு வாகனத்தை ஓட்டி வந்தது சோதனையில் தெரியவந்துள்ளது. அதனை உறுதி செய்வதற்காக பிரீத் அனலைசர் மூலம் சோதனை செய்ய முயன்ற போது இருவரும் போலீசாரின் சோதனைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

பின்னர் சத்யராஜ் தன்னுடைய மனைவி அக்சயாவுக்கு தொலைபேசி மூலம் பேசி அழைத்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த அக்க்ஷயா மது அருந்துவதற்கான சோதனை எடுப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, சூளைமேடு காவல் நிலைய காவலர் வெள்ளத்துரையை தாக்கி உள்ளார்.

இதன் பின்னர் மூவரும் அங்கிருந்து  சென்றுள்ளனர். தாக்குதலில் காயமடைந்த காவலர் வெள்ளத்துரை 
அளித்த புகாரின் அடிப்படையில் சூளைமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து சத்யராஜ் அவரது மனைவி அக்சயா மற்றும் நண்பர் வினோத்குமார் ஆகிய மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.