கணவன் மது அருந்தியதால் மனைவி வேதனை.. கணவன் மனைவி இருவரும் தற்கொலை!!

தென்காசி மாவட்டத்தில் கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட தகராறில் இருவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கணவன் மது அருந்தியதால் மனைவி வேதனை.. கணவன் மனைவி இருவரும் தற்கொலை!!

தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி அருகேயுள்ள தாட்டான்பட்டி பகுதியை சேர்ந்தவர் மரிய மிக்கேல். இவருக்கும் நெல்லையை சேர்ந்த ஜான்சிரானி என்பவருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

இந்த நிலையில் இருவரும் ஆழ்வார் குறிச்சி பகுதியில் உள்ள தேவாலயத்தில் நடைபெற்ற திருவிழாவில் பங்கேற்றனர். அப்போது மரிய மிக்கேல் மது அருந்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவரது மனைவி ஜான்சிராணி கண்டித்ததையடுத்து, இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் மனமுடைந்த பேபி ஜான்சிராணி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். தொடர்ந்து சிறிது நேரத்தில் காணாமல் போன இவரது கணவரும் அம்பை அருகே விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.