குடும்ப பிரச்சனை காரணமாக கிணற்றில் குதித்த பெண்..குழந்தைகள் உட்பட பரிதாப பலி..

பெண் ஒருவர் தனது இரண்டு குழந்தைகளோடு கிணற்றில் குத்தித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

குடும்ப பிரச்சனை காரணமாக கிணற்றில் குதித்த பெண்..குழந்தைகள் உட்பட பரிதாப பலி..

குஜராத் மாநிலத்தில் டாஹத் மாவட்டம் திகவாடி என்ற கிராமத்தை சேர்ந்தவர் மினக்‌ஷி ஹரிஜங் இவருக்கு வயது 30 திருமணமாகி 7 வயது மற்றும் 4 வயதில் மகள்கள் உள்ளனர்.இதற்கிடையில், மினக்‌ஷிக்கும் அவரது மாமனானார்,மாமியாருக்கும் இடையே பல்வேறு விவகாரங்களில் அவ்வப்போது சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. 

இதனையடுத்து, நேற்று அதிகாலை தனது இரண்டு குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு விறகு எடுக்கச்செல்வதாக கூறிவிட்டு மினக்‌ஷி வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். விறகு எடுப்பதாக சென்ற மினக்‌ஷி வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த உறவினர்கள் அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். 

அப்போது, வயல் பகுதியில் உள்ள கிணற்றின் அருகே மினக்‌ஷியின் செல்போன், செருப்பு கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் கிணற்றை பார்த்துள்ளனர். அங்கு மினக்‌ஷியும் அவரின் இரண்டு குழந்தைகளும் உயிரிழந்த நிலையில் மிதந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். 

இது  குறித்து போலீசார் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் மினக்‌ஷி மற்றும் அவரின் இரண்டு குழந்தைகளையும் மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விவகாரம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.