ஜெராக்ஸ் ரூபாய் நோட்டுக்களை கொடுத்து நூதன கொள்ளை...

திண்டிவனம் அருகே ஜெராக்ஸ் ரூபாய் நோட்டுக்களை கொடுத்து ஆடுகளை வாங்கி சென்ற 3 பேரை போலீசார் கஸ்டடியில் எடுத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

ஜெராக்ஸ் ரூபாய் நோட்டுக்களை கொடுத்து நூதன கொள்ளை...

திண்டிவனம் அடுத்த செண்டூர் பகுதியைச் சேர்ந்தவர் பழனி. இவருடைய மனைவி வசந்தா ஆடு வளர்த்து வருகிறார். இந்நிலையில் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அவர் ஆடு மேய்த்து கொண்டிருந்த போது, ஆட்டோவில் வந்த 3 பேர் ஆடுகளை விலைக்கு வேண்டும் என கேட்டுள்ளனர். அதற்கு வசந்தா கொடுக்க மறுத்துள்ளார். ஆனால் அவர்கள் விடாமல் ஆசை வார்த்தை கூறி நான்கு சிறிய ஆடு மற்றும் ஒரு பெரிய ஆட்டை 26 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கி சென்றுள்ளனர். இதையடுத்து அந்த பணத்தை வசந்தா தனது  மகளிடம் கொடுத்து சரி பார்த்தபோது அது போலி ரூபாய் நோட்டுகள் என்பது தெரியவந்தது. 

இது தொடர்பான புகார் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், விசாரித்த போது, திருவள்ளூரில் ஜெராக்ஸ் ரூபாய் நோட்டுக்களை கொடுத்து ஆடுகளை வாங்கிய வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டது தெரிய வந்தது.  இதையடுத்து சிறையில் இருந்த அப்துல் மஸித், அப்துல் சலீம் மற்றும் பர்கத் ஆகிய 3 பேரையும் கஸ்டடியில் எடுத்த விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.